.

Pages

Sunday, February 22, 2015

அதிரையில் நடைபெற்ற பேச இயலாத - காது கேளாத நலச்சங்கத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா !

அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா இன்று காலை 11 மணியளவில் சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தேசிய அறக்கட்டளை உள்ளூர் கமிட்டி உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிதாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வழங்க ஆவண செய்யவேண்டும், மானியத்தொகையை உயர்த்தி தரவேண்டும், வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசை வலியுறுத்துவது என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த நல சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மதிய உணவருந்தி சிறப்பித்தனர்.

வந்திருந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகியோர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.