.

Pages

Friday, March 6, 2015

ஷார்ஜாவில் 3 வது மாடியில் இருந்து விழுந்து 12 வயது இந்திய சிறுமி பரிதாப பலி !

ஷார்ஜாவில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 3 வது மாடியில் ஒரு பிளாட்டில் இந்திய குடும்பம் வசிக்கிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியானாள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஷார்ஜா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் பால்கனியில் மர நாற்காலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமி நாற்காலியில் அமரும் போது கட்டுப்பாட்டை இழந்து 3 வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியாயிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஷார்ஜா போலீசார் பால்கனி பகுதியில் குழந்தைகளை தனிமையில் விட வேண்டாம் என அடுக்குமாடி குடியிருப்புதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷார்ஜாவில் பெருகி வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் சிறுவர் சிறுமிகள் கீழே விழுந்து பலியாவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.