.

Pages

Sunday, March 1, 2015

பட்டுக்கோட்டை: ஒரு சிறப்பு பார்வை !

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் மிக முக்கியமான நகரம் பட்டுக்கோட்டை.

பட்டுக்கோட்டை தாலுகாவில் ஒரு நகராட்சி ( பட்டுக்கோட்டை ), 2 பேரூராட்சிகள் ( அதிரை, மதுக்கூர்) மற்றும் 76 ஊராட்சிகள் உள்ளது. பட்டுக்கோட்டை தாலுகாவின் மொத்த மக்கள்தொகை 2,97,827 ஆகும். பட்டுக்கோட்டை நகரின் மொத்த மக்கள்தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73,097 ஆகும். 2014ம் ஆண்டு உத்தேசிக்கப்படுகிற மொத்த மக்கள்தொகை 76,367 ஆகும். பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

1965ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பட்டுக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 33 வார்டுகளை உள்ளடக்கியது. 106 தெருக்கள் உள்ளது. பட்டுக்கோட்டை நகரத்தின் ஒட்டுமொத்த சாலை 114.6 கி.மீட்டராகும். இதில் நகராட்சி சாலை 94.53 கி.மீட்டராகும். தினசரி நகரத்திற்கு சராசரியாக 10,000 பேர் வந்து செல்கின்றனர். தற்போது பட்டுக்கோட்டை தேர்வுநிலை நகராட்சியாக உள்ளது. தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

பட்டுக்கோட்டை விவசாயம் சார்ந்த பகுதி. இந்த பகுதியில் முதன்முதலாக கிராம விஸ்தரிப்பு பயிற்சி நிலையம் என்ற விவசாயம் சார்ந்த பயிற்சி நிலையம் முத்துப்பேட்டை சாலையில் 1.4.1954ம் ஆண்டு துவங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர் ஊரக விரிவாக்க பயிற்சி நிலையமாக (ஆர்.இ.டி.சி) மாறியது. தற்போது இந்த பயிற்சி நிலையம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை என 6 மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நிலையமாக மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனமாக (ஆர்ஐஆர்டி) செயல்பட்டு வருகிறது.

மேற்கண்ட மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ஒரு இடத்தில் தான் என்பது பட்டுக்கோட்டை நகரில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இப்பகுதியில் ஆரம்ப காலத்தில் நெல் சாகுபடி மட்டுமே. குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது போதிய தண்ணீரும், மழையும் இல்லாததால் மாற்றுப்பயிராக தென்னை சாகுபடிக்கு  விவசாயிகள் மாறியுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள் விரைவில் காய்ப்பதுடன் நீண்டகால பயன் தரக்கூடியது. பட்டுக்கோட்டை நகரத்தின் அடையாள குறியாகவே ரயில் நிலையம் மட்டுமே அரசு ஆவணங்களில் இன்றும் உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக இவ்வழியே ஓடிய ரயில்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரயில்பாதை பணிகள் இன்றும் முழுமையடையாமல் உள்ளது வேதனைக்குறியது. காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்கவும், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் புதிய ரயில்பாதை திட்டத்தை துவக்கவும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடதக்கது.

நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.