இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அம்மாபட்டினம் அன்னை ஹதீஜா மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியை சுமதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை நடத்தி வைத்தார். முன்னதாக தமிழ்துறையின் தலைவர் முனைவர் A. கலீலுர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
'பெரிதுனும் பெரிது கேள்' என்ற தலைப்பில் 7 நிமிட கால அவகாசம் வழங்கி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்துறையின் தலைவர் முனைவர் A. கலீலுர் ரஹ்மான், துமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது, பேராசிரியை சாபிரா பேகம் ஆகியோர் நடுவராக அமர்ந்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் துமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பேச்சுபோட்டி, கவிதை போட்டிகளில் பங்கேற்ற தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


.jpg)





கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்வை ..
ReplyDeleteகாணொளியாக ..வெளியிட்டால் நன்றாக இருந்திருக்கும்
7 நிமிடத்தில் பேசி அசத்திய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete