.

Pages

Wednesday, March 11, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் அனைத்து கல்லூரிகள் பங்கேற்ற இலக்கிய போட்டிகள் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலை மற்றும் நுண்கலைக்குழுவின் சார்பில் கடந்த [ 08-03-2015 ] அன்று காலை 10.30 மணியளவில் அனைத்து கல்லூரிகள் பங்கேற்ற  இலக்கிய போட்டிகள் நிகழச்சி கல்லூரியின் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அம்மாபட்டினம் அன்னை ஹதீஜா மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியை சுமதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை நடத்தி வைத்தார். முன்னதாக தமிழ்துறையின் தலைவர் முனைவர் A. கலீலுர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

'பெரிதுனும் பெரிது கேள்' என்ற தலைப்பில் 7 நிமிட கால அவகாசம் வழங்கி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்துறையின் தலைவர் முனைவர் A. கலீலுர் ரஹ்மான், துமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது, பேராசிரியை சாபிரா பேகம் ஆகியோர் நடுவராக அமர்ந்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் துமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பேச்சுபோட்டி, கவிதை போட்டிகளில் பங்கேற்ற தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

2 comments:

  1. கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்வை ..
    காணொளியாக ..வெளியிட்டால் நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete
  2. 7 நிமிடத்தில் பேசி அசத்திய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.