முன்னதாக அதிரை காவல்துறை ஆய்வாளராக திரு ஆனந்த தாண்டவம் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கூடுதல் பொறுப்பாக அதிரை அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் கவனித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முதல் அதிரை காவல்துறை ஆய்வாளராக மு. கண்ணையன் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
கட்டப் பஞ்சாயத், வேண்டாதவர் மீது பொய்வழக்கு போடுதல் , மற்றும் பல நடவடிக்கை கண்டித்து முன்னாள் அதிரை காவல்துறை ஆய்வாளராக இருந்த ஆனந்த தாண்டவம் , செங்க மல கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பட்டுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் 18ம் தேதி என்று அறிவிக்கப் பட்டுள்ளது, இதன் எதிரொலியாக 1 1/2 மாதம் அதிரையில் பணியிருந்தவரை நாகை பட்டினம் அருகில் உள்ள கிராமத்திற்கு பணி மாற்றப் பட்டுள்ளார் ஆனந்த தாண்டவம். நேர்மையாக புதிய அதிகாரி நடந்துக்கொள்வார் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். வாழ்த்துக்கள்.
ReplyDelete