.

Pages

Sunday, April 2, 2017

கத்தாரில் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேறவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு !

அதிரை நியூஸ்: ஏப்-02
கடந்த 2016 டிசம்பர் 13 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய சட்டப்படி, கத்தார் நாட்டின் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்வதற்கும், நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் புதிய நிறுவனத்தில் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால் பல புதிய ஸ்டேடியங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கெல்லாம் மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபால் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே பெருமளவில் பணிபுரிகின்றனர். இத்தகைய தொழிலாளர்களுக்கு மேற்படி சட்டம் வழங்கியுள்ள சலுகைகளுக்கு மாற்றமாக தொழிலாளர்களை வெளியேறவிடாமல் தடுப்பதாகவும் இதற்கு அரசு துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கத்தார் அரசு, 184,551 விண்ணப்பங்களில் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடைய சுமார் 213 பேருடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் பிறருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் விளக்கமளித்துள்ளது என்றாலும் கத்தாரில் செயல்படும் மனித உரிமை அமைப்புக்கள் அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.