.

Pages

Monday, September 11, 2017

162 வருட உலகின் பழமையான பாரம்பரிய நீராவி ரயில் சென்னையில் இயக்கம் (படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.11
இந்திய ரயில்வேயின் பாரம்பரிய சின்னமாக கருதப்படும் 'எக்ஸ்பிரஸ் EIR 21' என்ற நீராவியில் இயங்கும் புகைவண்டி (ரயில்) நேற்று சென்னையில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. FAIRY QUEEN EXPRESS ரயிலைப் போல் தோற்றமளிக்கும் இந்த ரயில் உலகில் இன்னும் இயங்கும் தன்மையுடன் உள்ள அதி பழமையான ரயில்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

'EXPRESS EIR 21' நேற்று (ஞாயிறு 10.09.2017) சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை ஒற்றை பெட்டியுடன் ஒடியபோது இரு ஸ்டேஷன்களுக்கும் இடையேயுள்ள தண்டவாளங்களின் இருமருங்கிலும் ஏராளமான பொதுமக்கள் குழுமி நின்று கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

இந்த ரயில் 1855 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1909 ஆம் ஆண்டு வரை சேவையில் இருந்தது. அதன்பின் பிஹார் மாநிலத்தில் உள்ள ஜமல்பூர் லோகோமோடிவ் ஓர்க்ஷாப்பிலும் பின்பு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலும் சுமார் 101 வருடங்கள் பொதுமக்களின் பார்வைக்காக மழையிலும், வெயிலிலும் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதன் பாகங்கள் சேதமடைந்து பயனற்று போய் கொண்டிருந்தது.

2010 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பணிமனை நிர்வாகம் (PERAMBUR LOCOMOTIVE WORKSHOP) இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இந்த EIR 21 பாரம்பரிய ரயிலை மீண்டும் இயங்க வைக்கும் நடவடிக்கைகளை முடிக்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக இந்த ரயிலில் புதிதாக நவீன சாதனமான ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. நேற்றுடன் 6 முறையாக தனது பாரம்பரிய ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.

இதற்குமுன் 5 முறை இயக்கப்பட்ட பாரம்பரிய ரயில் ஓட்ட விபரங்கள்:
பெரம்பூர் ரயில்வே பணிமனையினர் பழுதுநீக்கிய இந்த பாரம்பரிய ரயில் சுதந்திர தின கொண்டாட்டங்களை சிறப்பிக்கும் வகையில் மீண்டும் தனது முதல் ஓட்டத்தை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி ரயில் நிலையம் வரை 2 பெட்டிகளுடன் ஓடி அசத்தியது.

தனது 2வது பாரம்பரிய ஓட்டத்தை 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி ரயில் நிலையம் வரையுள்ள 11 கி.மீ தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தது.

3வது பாரம்பரிய ஓட்டத்தை இந்தியாவின் 63வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் 2012 ஜனவரி 26 ஆம் நாள் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கும் கிண்டி ரயில் நிலையத்திற்கும் இடையிலுள்ள 11 கி.மீ தூரத்தை 60 இருக்கைகள்  உடைய ஒரு பெட்டியுடன் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் கடந்தது.

இந்திய ரயில்வேயின் 157வது வருடத்தை சிறப்பிக்கும் வகையில் 4வது முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெரம்பூர் வரையுள்ள 5 கி.மீ தூரத்தை வெற்றிகரமாக 60 இருக்கைகள் கொண்ட 1 பெட்டியுடன் கடந்தது.

மீண்டும் 5வது முறையாக 2013 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி வரையுள்ள 11 கி.மீ தூரத்திற்கு ஒரு பெட்டியுடன் இயங்கியது.

FAIRY QUEEN EXPRESS ஒரு பார்வை:
1855 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் மீண்டும் 1997 முதல் 2 சொகுசுப் பெட்டிகளுடன் பிரதி மாதம் 2வது மற்றும் 4வது சனிக்கழமைகளில் டெல்லி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து ஆல்வார் வரை சரிஷ்கா தேசிய பூங்கா வழியாக இயக்கப்படுகிறது. இந்தப் பழமையான ரயிலே இன்னும் இயக்கத்தில் உள்ள பயணிகள் ரயிலாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள் மற்றும் செய்தி வடிவம்
J. ஆசிக் அஹமது B.E

செய்திக் குறிப்புகள் Times of India & Hindustan Times ஆகிய பத்திரிக்கைகளிலிருந்து பெறப்பட்டன.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.