.

Pages

Wednesday, September 13, 2017

ஷார்ஜாவில் இந்தியத் தொழிலாளர் நல ஆலோசணை மையம் திறப்பு !

அதிரை நியூஸ்: செப். 13
ஷார்ஜாவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலம்சார் ஆலோசணை வழங்கிடும் Indian Workers Resource Centre (IWRC) எனும் மையம் திறக்கப்பட்டது. ஏற்கனவே துபையில் இதுபோன்ற மையம் செயல்பட்டு வரும் நிலையில் ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா வாழ் இந்தியர்களின் நலனுக்காக இந்த 2வது மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா நகரின் மத்தியில், மத்திய அஞ்சலகத்திற்கு எதிரேயுள்ள டமாஸ் டவர் (புருஜ் 2000) 22 வது மாடியில் இந்த மையத்தை இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி திறந்து வைத்தார். இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை வழங்கிவரும் BLS நிறுவனமும் இதன் அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(The services being provided at the IWRC Dubai at the Silver Tower, Cluster-I in Jumeirah Lakes Towers) துபையில் செயல்படும் முதலாவது ஆலோசணை மையம் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்களால் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டு மனநிம்மதி இழந்துள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான ஆலோசணை மற்றும் உதவிகளை 24 மணிநேரமும் வழங்கி வருகிறது. (IWRC Dubai runs a 24-hour toll-free helpline (800 INDIA or 800 46342) that offers assistance to Indians in distress in the UAE)

சட்ட நடவடிக்கைகள், சம்பளம் உட்பட அனைத்து நிதிப் பிரச்சனைகள், மனநல ஆலோசணைகளை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வழங்கி வருகின்றது. தேவையுடையோர் ஹெல்ப் லைன் எண், ஈமெயில் மற்றும் நேரிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்களின் குறைகள் பதிவு செய்யப்படுவதுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஒரு அடையாளச் சான்று எண் வழங்கப்பட்டு கவுன்சலிங் பெறுவதற்கான தேதியும் நேரமும் ஒதுக்கித் தரப்படும்.

மேலும், துபையில் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்களை நேரில் பெறுவதற்கான கவுன்டர்களும் காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை திறந்திருக்கும்.The walk-in counter at the new office will receive petitions directly from Indians in distress from 8am to 8pm from Saturday to Thursday. The centre also provides counselling by experts in legal, psychological and financial matters by phone or email and in person.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.