.

Pages

Sunday, September 3, 2017

அதிராம்பட்டினத்தில் வீணாகும் கூட்டுக் குடிநீர்: குளத்தில் நிரப்பக் கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.03
குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அதிராம்பட்டினத்தில் வீணாக வெளியேறும் சோதனை ஓட்ட கூட்டுக் குடிநீரை அருகில் உள்ள குளத்தில் நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிராம்பட்டினம் ஆகிய பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க கடந்த ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியீடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிராம்பட்டினத்தில் பல்வேறு கட்டங்களில் பணிகள் நடைபெற்று கடந்த ஜூலை 5 ந் தேதி, முதல்கட்டமாக, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் இப்பகுதியில் மீண்டும் நடைபெறுகிறது. இதில் மேலத்தெரு நீர்த் தேக்கத்தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீரை சேமித்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கும் தொட்டியிலிருந்து தண்ணீர் நிரம்பி வழிந்து வீணாக சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சாலையோரக் கழிவு நீர் வடிகாலில் கலந்துசெல்கிறது. குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கூட்டுக் குடிநீர் சோதனை ஓட்டத்  தண்ணீர் வீணாவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோதனை ஓட்டம் மேலும் சில நாட்கள் தொடர இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் அருகில் உள்ள செடியன் குளத்தில் நிரப்புவதற்கு இப்பகுதி தன்னார்வலர்கள் முயற்சியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்குளத்தில் நீரை நிரப்புவதன் மூலம் அனைத்து சமயத்தவர்கள் குளித்து மகிழவும், ஆடு, மாடு, பறவைகள் நீர் அருந்தி செல்ல முடியும்' என்றனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.