அதிராம்பட்டினம், செப். 11
அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்க பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களுக்கு எதிராக கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில், விவசாயம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நாடு பின்தங்கியுள்ளதாகவும், இப்பிரச்னைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் செப். 1-ம் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், பட்டுக்கோட்டை ஒன்றிய பயண குழுச் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். பிரசாரத்தை ஒன்றியச் செயலர் ஏ.எம் மார்க்ஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, கோரிக்கைகளை விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்க பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களுக்கு எதிராக கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில், விவசாயம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நாடு பின்தங்கியுள்ளதாகவும், இப்பிரச்னைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் செப். 1-ம் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், பட்டுக்கோட்டை ஒன்றிய பயண குழுச் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். பிரசாரத்தை ஒன்றியச் செயலர் ஏ.எம் மார்க்ஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, கோரிக்கைகளை விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.