.

Pages

Monday, September 11, 2017

அதிரை FM ~ 90.4 நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், செப்.11
'நமது சமூகம், 'நமது நலன்',  என்பதை குறிக்கோளாகக் கொண்டு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் உட்பட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளின் சமூக மேம்பாடு, கல்வித் தரம், ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தன்னிறைவைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் அதிராம்பட்டினம் தொழில் அதிபர் ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்களால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த சுமார் 2.5 லட்சம் நேயர்கள் பயன்பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையத்தை கடந்த (18-12-2016 ) அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. ஆ.அண்ணாதுரை அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதிரை சார்பில், இப்பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு ரூ.700  மதிப்பிலான,  பிலிப்ஸ் நிறுவன 2000 வானொலிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

வானொலியில், கல்வி, விளையாட்டு, ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக்குவரத்து, தொழிற் பயிற்சி, வேலை வாய்ப்புகள், அரசு அறிவிப்புகள், பொது அறிவிப்புகள், கலை அறிவியல் போட்டிகள், நேர்காணல்கள், தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை... மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை ஒலிப்பரப்பப்படுகிறது.

இந்நிலையில், அதிரை FM ~ 90.4 நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிரை FM ~ 90.4 நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். வானொலியில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சி பற்றிய கருத்து, நேயர்கள் விருப்பங்கள், நேயர்கள் அதிகப்படுத்த ஆலோசனைகள் உள்ளிட்டவை குறித்து நேயர்களிடம் கேட்கப்பட்டன. இதில் சிறந்த கருத்துரைகளை வழங்கிய 5 நேயர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில்,  அதிரை FM ~ 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்கு குழுத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், பேராசிரியர் இத்ரீஸ் முகமது, மாவட்ட நிருபர் சாகுல் ஹமீது, பேராசிரியர் ஹாஜா அப்துல் காதர், ஆசிரியர்கள் பார்த்த சாரதி, கார்த்திகேயன், நிலைய உதவியாளர்கள்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.