நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பின் சார்பில், அதிராம்பட்டினம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை, கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை பகல் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். ஹவாஜா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அவ்வமைப்பின் மாநிலச் செயலர் ரியாஸ் அகமது தொடங்கி வைத்து பேசுகையில்;
'நீட் நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகமெங்கும் சி.எப்.ஐ மாணவ அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வரை மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும், அனிதாவின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரியும் முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.