தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நெசவுத்தெரு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் நாளை (07-09-2017) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி, மலேசியா நாட்டில் வசித்துவரும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏ. முகைதீன், மிகப்பெரிய அளவிலான குர்ஆன் ஒன்றை தொழுகையாளிகளின் பயன்பாட்டிற்கு அன்பளிப்பு செய்து உள்ளார். அரபு மொழியில் உள்ள புனிதமிகு குர்ஆனின் நீளம் 1-3/4 அடி , அகலம் 2-1/2 அடி, 604 பக்கங்கள் கொண்டுள்ளது. இதன் எடை 5 கிலோ ஆகும்.
மஸ்ஜீது-ல்-ஹுதா பள்ளிவாசலில், குர்ஆன் பிரதி பிரத்தியோகமாகத் தயாரிக்கப்பட்ட சில்வர் ஸ்டாண்டில், இன்று புதன்கிழமை மாலை வைக்கப்பட்டது. இவற்றை தொழுகையாளிகள் பலர் வாசித்து செல்கின்றனர். இக்குர்ஆன் சவூதி அரேபியா நாட்டில் தயாரானது ஆகும். அதிராம்பட்டினம் பள்ளிவாசாலில், மிகப்பெரிய குர்ஆன் ஒன்று இருப்பது இதுதான் முதல்முறை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteபள்ளி வாசலில் பெரிய குர் ஆன் வைத்து அலங்கரிப்பது மட்டும் பெரிதல்ல
பள்ளி வாசலை குர் ஆன் சொன்ன படி அமல்களை கொண்டு அலங்கரிப்பது தான் முக்கியம்