.

Pages

Wednesday, September 6, 2017

அதிரையில் மிகப்பெரிய குர்ஆன்~ 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசலில் வைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நெசவுத்தெரு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் நாளை (07-09-2017) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி, மலேசியா நாட்டில் வசித்துவரும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏ. முகைதீன், மிகப்பெரிய அளவிலான குர்ஆன் ஒன்றை தொழுகையாளிகளின் பயன்பாட்டிற்கு அன்பளிப்பு செய்து உள்ளார். அரபு மொழியில் உள்ள புனிதமிகு குர்ஆனின் நீளம் 1-3/4 அடி , அகலம் 2-1/2 அடி, 604 பக்கங்கள் கொண்டுள்ளது. இதன் எடை 5 கிலோ ஆகும்.

மஸ்ஜீது-ல்-ஹுதா பள்ளிவாசலில், குர்ஆன் பிரதி பிரத்தியோகமாகத் தயாரிக்கப்பட்ட சில்வர் ஸ்டாண்டில், இன்று புதன்கிழமை மாலை வைக்கப்பட்டது. இவற்றை தொழுகையாளிகள் பலர் வாசித்து செல்கின்றனர். இக்குர்ஆன் சவூதி அரேபியா நாட்டில் தயாரானது ஆகும். அதிராம்பட்டினம் பள்ளிவாசாலில், மிகப்பெரிய குர்ஆன் ஒன்று இருப்பது இதுதான் முதல்முறை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

1 comment:

  1. மாஷா அல்லாஹ்
    பள்ளி வாசலில் பெரிய குர் ஆன் வைத்து அலங்கரிப்பது மட்டும் பெரிதல்ல
    பள்ளி வாசலை குர் ஆன் சொன்ன படி அமல்களை கொண்டு அலங்கரிப்பது தான் முக்கியம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.