.

Pages

Thursday, September 7, 2017

நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மாணவர் சங்கம் சார்பில், நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகக்கோரியும், அதிராம்பட்டினம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை, கல்லூரி முக்கம் அருகே இன்று வியாழக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும், அனிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தார்மிகப் பொறுப்பேற்று, பதவி விலகக்கோரியும் முழக்கமிட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.