.

Pages

Thursday, September 7, 2017

அதிரையில் 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் திறப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், நெசவுத்தெரு பகுதியில் 'மஸ்ஜீது-ல்-ஹுதா' புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்று (07-09-2017) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு நெசவுத்தெரு ஜமாத் மற்றும் நெசவுத்தெரு அமீரக அமைப்பின் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். அல் ஹாபிழ் சலாஹூத்தீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன் தமிழ் மொழி பெயர்ப்பை அல் ஹாபிழ் அப்துல் ஷக்கூர் வழங்கினார்.

விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அஸ்ஸத்துல்லா, 'வளரும் தலைமுறை செழிக்க, மஸ்ஜீத் நிர்வாகத்தின் பொறுப்பு' என்ற தலைப்பிலும், அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் எம்.ஜி. சஃபியுல்லாஹ் அன்வாரி, 'சமூகநலனில் மஸ்ஜீத்களின் பங்கு' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினார்கள். அல்ஹாஜ், கவிஞர் மு.மு முஹம்மது தாஹா, பள்ளிவாசல் இமாமை அறிமுகம் செய்து வைத்து, பள்ளிவாசல் வக்பு கடிதத்தை அனைவரரின் முன்பாக வாசித்தார். ஹாஜி அகமது அன்வர் முதல் பாங்கு ஒலியை எழுப்பினர். அதிராம்பட்டினம், மஸ்ஜீதுல் அக்ஸா ( மரைக்காப் பள்ளிவாசல்) மவ்லவி, அல் ஹாபிழ். அப்துல் காதிர் காசிஃபி லுஹ்ர் தொழுகையை நடத்தினார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும், மவ்லவி. பேராசிரியர் இத்ரீஸ் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில், அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் விழாக் குழுவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.