.

Pages

Monday, September 4, 2017

'தொழில் அதிபர்' பழஞ்சூர் K. செல்வம், இல்லம் - வணிக வளாகம் திறப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் K. செல்வம். அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் கிராமப் பகுதி மக்களிடையே அன்பாகக் பழகக்கூடியவர். திமுக மாநில செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நீண்டகால விசுவாசி. திமுக சார்பில் நடத்துகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார்.

திமுகவில் இவர் காட்டுகிற அதிக ஈடுபாட்டை அடுத்து, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பொறுப்பில் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை,அஜீஸ் நகரில் புதிய இல்லம் - வணிக வளாகம் கட்டி உள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக மாநில முதன்மைச் செயலரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமாகிய துரைமுருகன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புதிய இல்லம் - வணிக வளாகத்தை திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார்.

மேலும் விழாவில், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், மாநில விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ் விஜயன், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் து. செல்வம், இறைவன், மாவட்ட துணைச் செயலர் கா. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலர் பா. இராமநாதன், கிழக்கு ஒன்றிய செயலர் என்.பி. பார்த்திபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

விழா முடிவில், அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன் நன்றி கூறினார். விழாவில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பழஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளின் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும், பழஞ்சூர் K. செல்வம் - சுமித்திரை செல்வம் தம்பதியர் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

துரைமுருகனுக்கு, பழஞ்சூர் K. செல்வம் பொன்னாடை போர்த்துகிறார்

துரைமுருகனுக்கு, எஸ்.எச் அஸ்லம் பொன்னாடை போர்த்துகிறார்
துரைமுருகனுக்கு, முல்லை மதி பொன்னாடை போர்த்துகிறார்
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.