அதிரை நியூஸ்: பிப்.27
துபையில் ரன்வே பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடுத்த வருடம் 45 நாட்களுக்கு மூடப்படுகிறது
துபை சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு மற்றும் தெற்கு என 2 பிரதான ரன்வேக்கள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 1,100 விமானங்கள் இறங்கி, ஏறிச் செல்கின்றன. இதன் பராமரிப்பு பணிகள் வாராந்திர அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும் பாதுகாப்பு, சேவை மற்றும் திறனை மேம்படுத்துவதற்காக ரன்வேக்கள் மற்றும் அது தொடர்பிலான உட்கட்டமைப்புக்கள் முற்றிலும் புதிதாக சீரமைக்கப்படும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோல் வடபுற ரன்வேக்கான பெரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து தென்புற ரன்வே மட்டுமே இயங்கியது. அக்கால கட்டத்தில் விமான சேவைகள் குறைக்கப்பட்டதுடன் சில சேவைகள் துபை வேல்டு சென்ட்ரல் எனப்படும் மக்தூம் விமான நிலையத்திற்கும், ஒரு சில ஷார்ஜா விமான நிலையத்திற்கும் தற்காலிக திருப்பிவிடப்பட்டன.
தற்போது தென்புற ரன்வேயில் பெரும் சீரமைப்பு பணிகளை எதிர்வரும் 2019 ஏப்ரல் 16 முதல் மே 30 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மூடப்படுவதன் காரணத்தால் வடபுற ரன்வே மட்டுமே இயங்கும் என்பதால் விமான சேவைகளை குறைக்கவும் மாற்றுத் திட்டங்களில் ஈடுபடவும் அவகாசம் கிடைத்திடும் வகையில் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அனைத்து ஏர்லைன்ஸூகளுக்கும் முன்னறிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த தென்புற ரன்வே புதுப்பித்தல் பணிகளுக்காக சுமார் 60,000 டன் தார் (அஸ்பால்ட்), 8,000 மெட்ரிக் டன் காங்கிரீட், 800 கி.மீ நீளத்திற்கான கேபிள்கள், 5,500 ரன்வே விளக்குகள் ஆகியவை நவீன, பொருளாதார, சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தொழிற்நுட்பத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Emirates 247 / WAM
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் ரன்வே பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடுத்த வருடம் 45 நாட்களுக்கு மூடப்படுகிறது
துபை சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு மற்றும் தெற்கு என 2 பிரதான ரன்வேக்கள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 1,100 விமானங்கள் இறங்கி, ஏறிச் செல்கின்றன. இதன் பராமரிப்பு பணிகள் வாராந்திர அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும் பாதுகாப்பு, சேவை மற்றும் திறனை மேம்படுத்துவதற்காக ரன்வேக்கள் மற்றும் அது தொடர்பிலான உட்கட்டமைப்புக்கள் முற்றிலும் புதிதாக சீரமைக்கப்படும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோல் வடபுற ரன்வேக்கான பெரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து தென்புற ரன்வே மட்டுமே இயங்கியது. அக்கால கட்டத்தில் விமான சேவைகள் குறைக்கப்பட்டதுடன் சில சேவைகள் துபை வேல்டு சென்ட்ரல் எனப்படும் மக்தூம் விமான நிலையத்திற்கும், ஒரு சில ஷார்ஜா விமான நிலையத்திற்கும் தற்காலிக திருப்பிவிடப்பட்டன.
தற்போது தென்புற ரன்வேயில் பெரும் சீரமைப்பு பணிகளை எதிர்வரும் 2019 ஏப்ரல் 16 முதல் மே 30 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மூடப்படுவதன் காரணத்தால் வடபுற ரன்வே மட்டுமே இயங்கும் என்பதால் விமான சேவைகளை குறைக்கவும் மாற்றுத் திட்டங்களில் ஈடுபடவும் அவகாசம் கிடைத்திடும் வகையில் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அனைத்து ஏர்லைன்ஸூகளுக்கும் முன்னறிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த தென்புற ரன்வே புதுப்பித்தல் பணிகளுக்காக சுமார் 60,000 டன் தார் (அஸ்பால்ட்), 8,000 மெட்ரிக் டன் காங்கிரீட், 800 கி.மீ நீளத்திற்கான கேபிள்கள், 5,500 ரன்வே விளக்குகள் ஆகியவை நவீன, பொருளாதார, சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தொழிற்நுட்பத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Emirates 247 / WAM
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.