பேராவூரணி, பிப்.24
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் சேர்வை. விவசாயி. இவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் (வயது 87). இவர் முதுமை காரணமாக இன்று சனிக்கிழமை இயற்கை எய்தினார்.
இந்நிலையில், இவரது மகன்கள் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த இ.வி ஏகாம்பரம், இ.வி சந்திரமோகன், இ.வி காந்தி, மகள்கள் வசந்தா, வரலட்சுமி, பானுமதி ஆகியோர் தனது தாயின் விருப்பப்படி கண்களை தானம் செய்வதற்கு முன்வந்தனர்.
இதையடுத்து, பேராவூரணி லயன்ஸ் சங்கத்தின் உதவியோடு, வட்டாரத்தலைவர் எம். கனகராஜ் தகவலின் பேரில், லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தலைமையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தகவல் தொடர்பாளர் எம்.நிஜாமுதீன், உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, அப்துல் ஜலீல் மற்றும் ஆர். மாரிமுத்து ஆகியோர் விரைந்து சென்று, இறந்த ராஜாம்பாள் அம்மையாரின் இரண்டு கண்களை தானமாகப் பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், கண்களை தானமாக வழங்கிய ராஜாம்பாள் அம்மையார் குடும்பத்தினருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் சேர்வை. விவசாயி. இவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் (வயது 87). இவர் முதுமை காரணமாக இன்று சனிக்கிழமை இயற்கை எய்தினார்.
![]() |
ராஜாம்பாள் அம்மையார் |
இதையடுத்து, பேராவூரணி லயன்ஸ் சங்கத்தின் உதவியோடு, வட்டாரத்தலைவர் எம். கனகராஜ் தகவலின் பேரில், லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தலைமையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தகவல் தொடர்பாளர் எம்.நிஜாமுதீன், உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, அப்துல் ஜலீல் மற்றும் ஆர். மாரிமுத்து ஆகியோர் விரைந்து சென்று, இறந்த ராஜாம்பாள் அம்மையாரின் இரண்டு கண்களை தானமாகப் பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், கண்களை தானமாக வழங்கிய ராஜாம்பாள் அம்மையார் குடும்பத்தினருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.