.

Pages

Monday, February 26, 2018

ஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பித்து வழங்க முடிவு!

அதிரை நியூஸ்: பிப்.26
மார்ச் 21 முதல் ஓமன் சுற்றுலா விசாக்களின் விண்ணப்பம் மற்றும் விநியோகம் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும்.

ராயல் ஓமன் போலீஸ் எனப்படும் ஓமன் குடியேற்றத் துறையின் அறிவிப்பின்படி, எதிர்வரும்  2018 மார்ச் 21 ஆம் தேதி முதல் அனைத்து சுற்றுலா விசாக்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் விசாக்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் rop.gov.om என்ற இணையதளம் வழியாக மட்டுமே தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கப்பட வேண்டும், இனி குடியேற்றத்துறையின் சேவை மையங்களில் ( not at the service desks) விண்ணப்பிக்கும் நடைமுறையும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

ஆன்லைன் விண்ணப்பத்துடன் தளத்தின் வழியாக கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் வழியாக (the official e-payment portal) அதற்குரிய கட்டணங்களையும் செலுத்த வேண்டும். தொடர்ந்து விண்ணப்பம் ஏற்கப்பட்டது குறித்து ஈ-மெயில் வழியாக தெரிவிக்கப்படும் (e-visa approval notification by email), அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்து ஓமன் ஏர்போர்ட் கவுண்டர்களில் காட்டினால் அங்குள்ள அலுவலர் நாட்டிற்குள் நுழைய அனுமதி தருவார். இந்த புதிய நடைமுறையின் மூலம் ஓமன் விமான நிலையங்களில் விசாவிற்காக நீண்ட வரிசைகளில் காத்து நிற்கும் தேவையிருக்காது.

கடந்த வருடம் ஹோட்டல் மற்றும் டூர் ஆப்பரேட்டர்களுக்கு விருந்தினர்கள் சார்பாக ஈ-விசாக்களை விண்ணப்பிக்கும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் ஸ்பான்சர் இன்றி ஈ-விசாவை நேரிடையாக விண்ணப்பிக்க அனுமதியளிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்ததன் எதிரொலியாக மாற்றுப் பொருளாதார தேடல்களில் ஒன்றாக சுற்றுலா வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் வருடத்திற்கு சுமார் 5 மில்லியன் சுற்றுலாவாசிகளை ஓமனுக்குள் ஈர்க்கும் நோக்குடன் இத்தகைய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன, தற்போது ஆண்டிற்கு சுமார் 2.7 மில்லியன் சுற்றுலாவாசிகளே வருகை தருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.