அதிராம்பட்டினம், பிப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 69 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
விழாவில், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வீ.இராஜேந்திரன் கலந்துகொண்டு ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைத்து, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். முன்னதாக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் சுடரை கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர்.
தொடக்கத்தில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி வரவேற்றுப் பேசினார். இதில் பள்ளி கடந்த ஆண்டுகளில் மாநில அளவில் கால்பந்து, தடகளம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்த்திய அபார சாதனைகளைப் பட்டியலிட்டார்.
போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஏ. ராஜா, ஏ.ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஏ.ராஜா ஆண்டறிக்கை வாசித்து, விழா முடிவில் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் மு.உமர் பாருக் தொகுத்து வழங்கினார்.
பின்னர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக
பட்டுக்கோட்டை சார் கருவூல உதவி அலுவலர் ஆ. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் கல்வி நிறுவன ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 69 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
விழாவில், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
தொடக்கத்தில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி வரவேற்றுப் பேசினார். இதில் பள்ளி கடந்த ஆண்டுகளில் மாநில அளவில் கால்பந்து, தடகளம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்த்திய அபார சாதனைகளைப் பட்டியலிட்டார்.
போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஏ. ராஜா, ஏ.ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஏ.ராஜா ஆண்டறிக்கை வாசித்து, விழா முடிவில் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் மு.உமர் பாருக் தொகுத்து வழங்கினார்.
பின்னர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக
பட்டுக்கோட்டை சார் கருவூல உதவி அலுவலர் ஆ. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் கல்வி நிறுவன ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.