.

Pages

Thursday, February 15, 2018

தஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (15.02.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  தெரிவித்ததாவது;
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டது மற்றும் பிற சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தி கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பு குழு மற்றும் கோட்ட அளவில் துணை கோட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனரா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொத்தடிமை தொழிலாளர் என்பது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காமல் அதிக வேலையை வாங்கிக் கொள்வதும், பெற்றோர்கள் பெற்ற கடனுக்காக தங்கள் குழந்தைகளை கொத்தடிமைகளாக வேலை வாங்குவது தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வர உரிமை உண்டு.   இந்த உரிமை மறுக்கப்பட்டால் அது கொத்தடிமையாக கருதப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், செங்கிப்பட்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனரா என்று தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.  இத்துடன் மாவட்டத்தில்  செங்கல் சூளைகள், உணவு விடுதி, ஆடு வளர்ப்போர் பண்ணை, தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா என்று ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுக்க வேண்டும்.  தொழிலாளர் நல ஆய்வாளர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.  எனவே, தொழிற்சாலைகள், உணவு விடுதிகள், செங்கல் சு10ளைகள் ஆகிய இடங்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

கொத்தடிமை தொழிலாளர் முறை சட்டம் 1976 பிரிவு 4 கொத்தடிமை தொழில் முறைகளை தடை செய்கிறது மற்றும் பிரிவு 16 கொத்தடிமை தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தி வேலை வாங்கும் உரிமையாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் ரூ.2,000 அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொத்தடிமை தொழிலாளர் கண்டறிந்து மீட்கப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்கு நிவாரணத் தொகை முதற்கட்டமாக ரூ.20,000 வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை மொத்தம் ஆண்களுக்கு ரூ.1,00,000மும், பெண் குழந்தைகளுக்கு ரூ.2,00,000மும், வயதான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு நிhரவணத் தொகை ரூ.3,00,000 வழங்கி கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நமது மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆய்வாளர் இரா.கவியரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, குழந்தை பாதுகாப்பு அலுவலர் நடராஜன் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.