.

Pages

Monday, February 26, 2018

ஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட்டுமானப் பணிகள் நிலவரம்!

அதிரை நியூஸ்: பிப்.26
ஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட்டுமானப் பணிகள் 2020 ஆண்டிற்குள் நிறைவுறும்.

தாயிப் நகரில் செயல்பட்டு வரும் தற்போதைய பிரதேச விமான நிலையத்திற்கு (Ta'if Regional Airport) மாற்றாக புனித மக்கா நகரிலிருந்து சுமார் 117 கி.மீ தூரத்திலும் தாயிப் நகரிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 40 கி.மீ தூரத்திலும் புதிதாக கட்டப்பட்டு வரும் தாயிப் விமான நிலையம் சுமார் 48 மில்லியன் சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இதன் கட்டுமானங்கள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என்றும் இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 6 மில்லியன் பயணிகளை பிரதானமாக ஹஜ், உம்ரா பயணிகளை கையாள முடியும் என சவுதி அரேபியாவின் விமான நிலையங்களுக்கான ஆணையம் (GACA) தெரிவித்துள்ளது.

தற்போதைய பழைய தாயிப் பிரதேச விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாளும் திறனுடையது. இந்த பழைய நிலையம் புதிய விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு ஒரே விமான நிலையமாக மாற்றப்படும். இது பிரதேச விமான நிலையமாக இருந்தாலும் சில அரபுநாடுகளின் சர்வதேச சேவைகளும் தாயிப் விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும் அஸீர் மாகாணம் 'குன்புதாஹ்' (Al Qunfudhah  எனும் துறைமுக நகரில் சுமார் 24 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள புதிய 'குன்புதாஹ் விமான நிலைய' பணி ஒப்பந்தங்கள் இன்னும் 60 நாட்களுக்குள் இறுதி செய்யப்படவுள்ளன. இது மக்காவிலிருந்து சுமார் 290 கி.மீ தூரத்திலும் ஜித்தாவிலிருந்து 340 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

அதேபோல் ஜித்தா மாநகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 2018 மே மாதம் முதல் இயங்கத் துவங்கும் என புனித மக்காவிற்கான அமீர் இளவரசர் காலித் அல் பைசல் தெரிவித்தார்.

Source: Saudi Gazette / Saudi Business / Wikipedia
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.