அதிராம்பட்டினம், பிப்.19
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிராம்பட்டினம் கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின், தஞ்சை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே ஜியாவூதீன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிரை பேரூர் செயலராக ஏ.ஜே ஜியாவுதீன், துணைத் தலைவராக எஸ். மீரா சாஹிப், இணைச் செயலராக முகமது தம்பி, துணைச் செயலராக சிவக்குமார், இளைஞர் அணிச் செயலராக சேக் அப்துல்லா, மீனவரணிச் செயலராக முத்துகிருஷ்ணன், உழவர் அணிச் செயலராக சி.சரவணன் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், அதிரை பேரூர் அனைத்து வார்டுகளிலும் புதிதாக கிளைகள் அமைப்பது, அதிரையில் 10 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது, அதிரையில் பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் எம்.அப்துல் முனாப் மற்றும் உறுப்பினர்கள் பசீர் அகமது, யாசர் அகமது, சாகுல் ஹமீது, பாருக், அக்ரம் சேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிராம்பட்டினம் கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின், தஞ்சை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே ஜியாவூதீன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிரை பேரூர் செயலராக ஏ.ஜே ஜியாவுதீன், துணைத் தலைவராக எஸ். மீரா சாஹிப், இணைச் செயலராக முகமது தம்பி, துணைச் செயலராக சிவக்குமார், இளைஞர் அணிச் செயலராக சேக் அப்துல்லா, மீனவரணிச் செயலராக முத்துகிருஷ்ணன், உழவர் அணிச் செயலராக சி.சரவணன் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், அதிரை பேரூர் அனைத்து வார்டுகளிலும் புதிதாக கிளைகள் அமைப்பது, அதிரையில் 10 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது, அதிரையில் பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் எம்.அப்துல் முனாப் மற்றும் உறுப்பினர்கள் பசீர் அகமது, யாசர் அகமது, சாகுல் ஹமீது, பாருக், அக்ரம் சேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.