.

Pages

Wednesday, February 21, 2018

துபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் !

அதிரை நியூஸ்: பிப்.21
துபையில் குழந்தைகளுக்கான சிறந்த மாற்று உணவாக ஒட்டகப்பால் பவுடர் கண்டறியப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

துபை வேல்டு டிரேட் சென்டரில் தற்போது கல்ப்புட் 2018 (Gulfood 2018 a food and beverage commodity expo that is being held at the Dubai World Trade Centre until February 22) என்ற பொருளின் கீழ் சந்தையில் புதிதாக அறிமுகமாகும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த அறிமுகப் பொருட்களுக்கான கண்காட்சி நாளையுடன் (பிப். 22) நிறைவடைகிறது.

இந்த உணவு கண்காட்சியில் அமீரக உணவுத் தயாரிப்பு நிறுவனம் (The Emirates Industry for Camel Milk and Products) ஒன்று, குழந்தைகள் சந்திக்கும் உணவு ஒவ்வாமை மற்றும் சந்தையில் உள்ள இதர குழந்தை உணவுத் தயாரிப்புகளுக்கு மாற்றாக ‘Camelicious’  என்ற ஒட்டகப்பால் உணவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரைவில் அமீரகம் எங்கும் விற்பனைக்கு வரவுள்ளது.

பொதுவாக ஆடு, மாடுகளின் பால்களிலிருந்து தயாரிக்கப்பட்டு தற்போது சந்தையில் விற்கப்படும் குழந்தை உணவுகளால் 1 முதல் 3 வயதுக்குட்பட்ட சுமார் 2.5 சதவிகிதக் குழந்தைகள் ஒவ்வாமையை (ALLERGIES) சந்திக்கின்றனர். குறிப்பாக வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் தோல் அலர்ஜிகளும் உண்டாகின்றன. இந்த ஒட்டகப்பால் பவுடர் உணவு அருந்துவதால் மேற்காணும் விளைவுகள் தவிர்க்கப்படும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒட்டகப்பாலில் பிற பால் பவுடர் தயாரிப்புக்களில் உள்ளதைவிட 10 மடங்கு கூடுதல் இரும்புச்சத்து (Iron fount) உள்ளதால் தினசரி வளர்ச்சிக்குத் தேவையான அளவு இரத்தத்தை வலுப்படுத்தி இரத்த சோகை ஏற்படுவதிலிருந்து காக்கும், தேவையான கனிமங்களை வழங்கி சீரான உடல் வளர்ச்சிக்கு உதவும்.

இதில் வைட்டமின் சி அதிகமிருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் பலத்தை கூட்டும். மேலும் வைரஸ், பேக்ட்டீரியா தொற்றைத் தடுக்கும். அதேபோல் வைட்டமின் பி1, பி2 மற்றும் தையமின் போன்றவைகளும் அதிகளவில் உள்ளன என உலகின முதலாவது ஒட்டகப்பால் உணவை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.