தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (20.02.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
நாடு தழுவிய குடற்புழு நீக்க நாளில் ஒரு வயது குழந்தையிலிருந்து 19 வயது வரை உள்ள அனைவருக்கும் வருகின்ற பிப்ரவரி 26ம் தேதி (திங்கள் கிழமை), விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மார்ச் 31ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய தினங்களில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய பாடத்திட்ட பள்ளிகள், மத்திய அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
½ (200 மில்லி கிராம்) மாத்திரை அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவ மருந்து 1-2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 1 மாத்திரை (400 மில்லி கிராம்) அல்பெண்டசோல் 2-19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் (ஆண், பெண் இரு பாலருக்கும்) கொடுக்கப்படவேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,46,731 மாணவ மாணவிகளுக்கும், தனியார் பள்ளிகளில் பயிலும் 2,06,982 மாணவ மாணவிகளுக்கும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மற்றும் பள்ளி செல்லா 94,336 குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும்.
ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே குடற்புழுவினால் ஏற்படும் பாதிப்புகள், குடற்புழு நீக்குவதனால் ஏற்படும் நன்மைகள், குடற்புழு தடுப்பு வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றை இணைத்து குடற்புழு நீக்கும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.நமச்சிவாயம், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
நாடு தழுவிய குடற்புழு நீக்க நாளில் ஒரு வயது குழந்தையிலிருந்து 19 வயது வரை உள்ள அனைவருக்கும் வருகின்ற பிப்ரவரி 26ம் தேதி (திங்கள் கிழமை), விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மார்ச் 31ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய தினங்களில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய பாடத்திட்ட பள்ளிகள், மத்திய அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
½ (200 மில்லி கிராம்) மாத்திரை அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவ மருந்து 1-2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 1 மாத்திரை (400 மில்லி கிராம்) அல்பெண்டசோல் 2-19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் (ஆண், பெண் இரு பாலருக்கும்) கொடுக்கப்படவேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,46,731 மாணவ மாணவிகளுக்கும், தனியார் பள்ளிகளில் பயிலும் 2,06,982 மாணவ மாணவிகளுக்கும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மற்றும் பள்ளி செல்லா 94,336 குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும்.
ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே குடற்புழுவினால் ஏற்படும் பாதிப்புகள், குடற்புழு நீக்குவதனால் ஏற்படும் நன்மைகள், குடற்புழு தடுப்பு வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றை இணைத்து குடற்புழு நீக்கும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.நமச்சிவாயம், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.