தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து சுற்றுலாத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (28.02.2018) தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும், சுற்றுலா பயணிகள் வருவதிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி மாணவ மாணவயிர்களுக்கு சுற்றுலா தலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 50 மாணவ மாணவியர் வீதம் அரசு பள்ளியில் நன்கு பயிலும் 150 மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் சுற்றுலாவாக இன்று சுற்றுலா தலங்களான பெரிய கோவில், அரண்மனை, கல்லணை, திருச்சி அண்ணா கோளரங்கம் ஆகியவற்றை சுற்றி காண்பிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் ஒரு புத்தக பை மதிய உணவு, சிற்றுண்டி ஆகியவை சுற்றலாத்துறை சார்பில் வழங்கப்பட்டது. இரண்டு பேருந்துகளில் சென்ற பள்ளி மாணவ மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும், சுற்றுலா பயணிகள் வருவதிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி மாணவ மாணவயிர்களுக்கு சுற்றுலா தலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 50 மாணவ மாணவியர் வீதம் அரசு பள்ளியில் நன்கு பயிலும் 150 மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் சுற்றுலாவாக இன்று சுற்றுலா தலங்களான பெரிய கோவில், அரண்மனை, கல்லணை, திருச்சி அண்ணா கோளரங்கம் ஆகியவற்றை சுற்றி காண்பிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் ஒரு புத்தக பை மதிய உணவு, சிற்றுண்டி ஆகியவை சுற்றலாத்துறை சார்பில் வழங்கப்பட்டது. இரண்டு பேருந்துகளில் சென்ற பள்ளி மாணவ மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.