.

Pages

Saturday, February 17, 2018

கைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெண்!

அதிரை நியூஸ்: பிப்.17
சீனாவில் தற்போது சீனப்புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவதால் பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதுடன் சீனப்புத்தாண்டை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லுவோர் தங்களுடைய பண சேமிப்பையும் இக்காலங்களில் எடுத்துச் செல்வது வாடிக்கையே.

தெற்கு சீனாவின் டொங்குவான் ரயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் அங்கிருந்த காவலர்கள் பணத்தை திருடிக் கொள்வார்கள் என்ற பயத்தில் ரயில்வே நிலையங்களில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்டுள்ள எக்ஸ்-ரே ஸ்கேனிங் கருவிகளில் தனது பணப்பை மட்டும் வைத்து அனுப்பாமல் பையுடன் தானும் கூடவே சென்றுள்ளார்.

இந்த செய்தியும் அதன் போட்டோக்களும் பத்திரிக்கைகளில் வெளியானதை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் குறித்து பயணிகள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், எக்ஸ்-ரே கதிர்கள் மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கக்கூடியவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Sources: Fox News / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.