.

Pages

Thursday, February 22, 2018

மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா (படங்கள்)

பேராவூரணி பிப்.22
பேராவூரணி ஶ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1,2,3 சார்பாக  தொடக்க விழா வியாழக்கிழமை அன்று  ஏனாதிகரம்பை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி அறிவியல் ஆலோசகர் ராமையன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சோலாச்சி ஆகியோர்   முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முன்னதாக பேரா கி.புவனேசுவரி வரவேற்றார். பேரா ஜி.கீதா அறிக்கை வாசித்தார்.

தொடக்க விழாவில் மல்லிகை வை.சிதம்பரம், என்.மணவாளன், பி.ஆதிராஜன், க.முத்துராமலிங்கம், கோ.சண்முகநாதன், பின்னவாசல் பெரியய்யா, பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி, கால்நடை மருத்துவர் மதிவாணன், தாயகம் தமிழரசன், ஒப்பிலாமணி, ஆசிரியர் ராமதுரை, ஆர்.பி.நடராஜன், சோமசுந்தரம், பேராசிரியர்கள் ஜெகதீசன், அரவிந்தன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா ஏ.பழனிவேலு நன்றி கூறினார்.

தொடர்ந்து பள்ளி மற்றும் கிராம பகுதிகளில் தூய்மைப்பணி மற்றும் சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.