அதிராம்பட்டினம், பிப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள முடுக்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன். கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் புதன்கிழமை தீப்பிடித்தது. இதில், வீட்டின் மேற்கூரை தீயில் கருகின.
இந்நிலையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பாஞ்சாலன் குடும்பத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரத்தை பாஞ்சாலனிடம் வழங்கினார். மேலும், அரசின் சார்பில், தீ விபத்து நிவாரண உதவி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.
அப்போது, அதிமுக ஒன்றியச் செயலர் பி. சுப்ரமணியன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் முகமது தமீம், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், அபுதாஹிர் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள முடுக்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன். கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் புதன்கிழமை தீப்பிடித்தது. இதில், வீட்டின் மேற்கூரை தீயில் கருகின.
இந்நிலையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பாஞ்சாலன் குடும்பத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரத்தை பாஞ்சாலனிடம் வழங்கினார். மேலும், அரசின் சார்பில், தீ விபத்து நிவாரண உதவி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.
அப்போது, அதிமுக ஒன்றியச் செயலர் பி. சுப்ரமணியன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் முகமது தமீம், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், அபுதாஹிர் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.