பேராவூரணி பிப்.20
தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் சேதுபாவாசத்திரத்தை அடுத்த பிள்ளையார் திடலில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பிள்ளையார்திடல் பல்நோக்கு புயல் பாதுகாப்பு இல்ல வளாகத்தில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார்.
மருத்துவ அலுவலர்கள் இராமலிங்கம், இளவரசி, காவிய ப்ரீத்தி, சர்மிளா மற்றும் செவிலியர்கள், சுகாதார துறை பணியாளர்கள் 850 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இசிஜி, ரத்தப்பரிசோதனை, பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.
வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் மற்றும் பிள்ளையார்திடல், வெளிமடம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் சேதுபாவாசத்திரத்தை அடுத்த பிள்ளையார் திடலில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பிள்ளையார்திடல் பல்நோக்கு புயல் பாதுகாப்பு இல்ல வளாகத்தில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார்.
மருத்துவ அலுவலர்கள் இராமலிங்கம், இளவரசி, காவிய ப்ரீத்தி, சர்மிளா மற்றும் செவிலியர்கள், சுகாதார துறை பணியாளர்கள் 850 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இசிஜி, ரத்தப்பரிசோதனை, பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.
வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் மற்றும் பிள்ளையார்திடல், வெளிமடம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.