.

Pages

Friday, February 16, 2018

ஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம்  நகர், கே.எஸ்.ஏ லேன், ஷப்னம் லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆதம் நகர் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில், தலைவராக எம்.ஒய் அஹமது ஜலாலுதீன், செயலராக ஜெ. அப்துல் காதர், பொருளாளராக எஃப். சிராஜுதீன், துணைத் தலைவராக ஆர். அசன் அலியார், துணைச் செயலாளர்களாக எஸ். அசாருதீன், எஸ். ஹாதில் அஹமது, துணைப் பொருளாளர்களாக ஏ. அப்துல் ஹக்கீம், எம்.ஏ பயாஸ் அகமது, ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக எஸ். அப்துல் ஜலீல், இ. வாப்பு மரைக்காயர், என்.பாவா பகுருதீன், ஆர். அஹமது ஹாஜா, எம். சகாபுதீன் ஆகியயோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் ஆதம் நகர் ஜமாத்தார்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.