.

Pages

Tuesday, May 15, 2018

நோன்பு கஞ்சி தயாரிக்க: தஞ்சை மாவட்டத்தில் 184 பள்ளிவாசல்களுக்கு 329 மெட்ரிக் டன் பச்சரி அனுமதி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2018ம் ஆண்டு  புனித ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட 184 பள்ளிவாசல்களுக்கு 329.595 மெட்ரிக் டன் பச்சரிசிக்கான அனுமதி ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (15.05.2018) செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

பாபநாசம் வட்டம், ராஜகிரி ஹிதாயதுன் நிஸ்வான் பொது அரபி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கும்பகோணம் அறிஞர் அண்ணா கூட்டுறவு சிறப்பங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புனித ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட அரிசி ஒதுக்கீடு ஆணையினை பள்ளிவாசல்களுக்கு வழங்கி வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்ததாவது;
மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு புனித ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட பச்சரிசி வழங்கி வருகிறது. அதன்படி, இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 வட்டங்களில் உள்ள 184 பள்ளி வாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட 329.595 டன் மெட்ரிக் டன் பச்சரிசிக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டத்தில் 26 பள்ளி வாசல்களுக்கு 29.525 மெட்ரிக் டன்னும், திருவையாறு வட்டத்தில் 7 பள்ளி வாசல்களுக்கு 12.1 மெட்ரிக் டன்னும், ஒரத்தநாடு வட்டத்தில் 8 பள்ளி வாசல்களுக்கு 9 மெட்ரிக் டன்னும், பாபநாசம் வட்டத்தில் 35 பள்ளி வாசல்களுக்கு 44.88 மெட்ரிக் டன்னும், கும்பகோணம் வட்டத்தில் 23 பள்ளி வாசல்களுக்கு 45.175 மெட்ரிக் டன்னும், திருவிடைமருதூர் வட்டததில் 23 பள்ளி வாசல்களுக்கு 52.93 மெட்ரிக் டன்னும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 44 பள்ளி வாசல்களுக்கு 75.15 மெட்ரிக் டன்னும், பேராவூரணி வட்டத்தில் 15 பள்ளி வாசல்களுக்கு 55 மெட்ரிக் டன்னும், பூதலூர் வட்டத்தில் 3 பள்ளி வாசல்களுக்கு 5.75 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 184 பள்ளி வாசல்களுக்கு 329.595 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்குவதற்கான ஆணை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புனித ரமலான் பண்டிகை நோன்பு கடைபிடிக்கும் 1,54,172 இஸ்லாமிய சகோதரர்கள் பயனடைவார்கள். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாரளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் அயூப்கான், அரசு கூடுதல் வழக்கறிஞர் அறிவழகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஏ.வி.கே.அசோக்குமார், கோவி.மகாலிங்கம், சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண் இயக்குநர் முத்துகுமார், வட்டாட்சியர்கள் வெங்கடாசலம் (கும்பகோணம்), மாணிக்கராஜ் (பாபநாசம்), வட்ட வழங்கல் அலுவலர்கள் ரவிச்சந்திரன் (கும்பகோணம்), பூங்கொடி (பாபநாசம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.