.

Pages

Tuesday, May 15, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம்!

பேராவூரணி மே.15-
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். தேங்காய் கொப்பரையில் சல்பர் என்ற கொடிய அபாயகரமான வேதிப்பொருளை கலப்பதை தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் மண்வெட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச ஒன்றியச்செயலாளர் வி.ராசமாணிக்கம், ஒன்றியத் தலைவர் வி.எஸ்.கோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
விவசாய சங்க மாவட்ட தலைவர் பா.பாலசுந்தரம், நிர்வாகிகள் டி.ரவி, டி.பழனியப்பன், ஆர்.கோவிந்தராசு, பி.ஏ.கருப்பையா, கே.எஸ்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் டி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துவைத்து பேசினார்.

பாரதி வை.நடராஜன், வி.கோபால், எம்.சித்திரவேலு, ஏ.மரியசெல்வம், ஆர்.விஜயலட்சுமி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், " காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்க வேண்டும். செங்கமங்கலம் மேலத்தெரு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தேங்காய் கொப்பரையில் கொடிய சல்பர் வேதிப்பொருள் சேர்ப்பதை தடை செய்யவேண்டும். கிராமப்புற இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.