.

Pages

Tuesday, May 15, 2018

பட்டுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு!

பட்டுக்கோட்டை மே.15-
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய் அன்று பட்டுக்கோட்டை லெட்சுமிபிரியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் தெய்வானை மற்றும்  சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பில், ஹைபிரிட் பிஎல்ஓ ஆப் எனப்படும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம், தேர்தல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்களை நீக்கி, தேவையான இடத்தில் உள்ள பெயரை உறுதி செய்தல், வாக்குச்சாவடி அலுவலர், மேற்பார்வையாளர், தேர்தல் அலுவலர், தேர்தல் நடைபெறும் இடம், அருகில் உள்ள காவல்நிலையம் மற்றும் தேர்தல் தொடர்பான முழு நடவடிக்கைகளையும் கணினி மூலமாக இந்திய தேர்தல் ஆணையம் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி வகுப்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களில் மொத்தம் உள்ள 254 பேரில் 223 பேர் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.