.

Pages

Sunday, June 1, 2014

மல்லிபட்டினம் அருகே மற்றுமொரு அருவாள் வெட்டு சம்பவம் !

மல்லிபட்டினத்தில் கடந்த [ 28-05-2014 ] அன்று அப்பகுதி இளைஞர்கள் மீது மர்ம கும்பல் நடத்திய பயங்கர கொலை வெறி தாக்குதலை அடுத்து பதற்றமாக காணப்படும் மல்லிபட்டினம் பகுதியில் ஏராளமான் போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மல்லிபட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் மற்றுமொரு அருவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுபட்டினத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி ( 50  ) இவர் அந்தபகுதியில் முன்னாள் கிராம பொறுப்பில் இருந்துள்ளார். நேற்று மாலை புதுபட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கட்டுமாவாடி செல்ல வழியை கேட்டதாகவும், ரெங்கசாமி கையை காட்டி வழியை சொல்ல முற்படும்போது மர்ம நபர்கள் திடிரென கையில் வைத்திருந்த அருவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ரெங்கசாமி தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

2 comments:

  1. காலத்தின் மோசம், மக்களில் அஜாக்கிரதை.

    ReplyDelete
  2. நண்பர் ரெங்கசாமி அவர்கள் ஒரு காங்கிரஸ்காரர்.இவர்களை தாக்கிய சமூகத்திற்கு எதிரான குண்டரகளை காவல்துறையினர் கைதுசெய்ய வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.