.

Pages

Monday, June 2, 2014

அதிரை பைத்துல்மால் குரான் மாநாடு - இறுதி நாள் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என்ற முடிவையடுத்து நமதூர் முகைதீன் ஜும்மாபள்ளி அருகில் திருக்குரான் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. 

அதன் தொடர்ச்சியாக நேற்று மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகளும் அதனை தொடர்ந்து மாலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு மார்க்க அறிஞர்களால் சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூன்றாம் நாளாகிய நேற்றுடன் மாநாடு நிகழ்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.
















2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    கடும்முயர்ச்சி, சில எதிர்ப்பு, சிலரின் கடுப்பு, இவைகளுக்கு மத்தியில் நல்லபடியாக ஆரம்பித்து இனிதே நடந்து முடிந்தது. இது இப்போதைக்கு நடந்து முடிந்தாலும், நமது முயற்சி இனிதான் தொடர வேண்டும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மேல் மிகுந்த அக்கறை கொண்டு பல கோணங்களில் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க வேண்டும். வீட்டில் நல்ல பிள்ளை, பள்ளியில் நல்ல பிள்ளை, இந்த இரண்டுக்கும் நடுவில் எப்படிப்பட்ட பிள்ளை?

    தாய்மார்களே தூங்கி விட வேண்டாம், இன்று நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்து கொண்டு கண்காணித்து வந்தால் நாளை நம் பிள்ளைகள் வைரங்களாக ஜொலிப்பார்கள் என்பதில் ஒரு இம்மி கூட சந்தேகம் இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.