இன்று [ 07-06-2014 ] காலை 9 மணியளவில் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
L.M.S. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் K.T. முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை அல் மதினத்துல் இல்ம் கல்லூரியின் முதல்வர் A. முஹம்மது ஷப்பீர் அலி ஆலிம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். இதில் அதிரையின் பல்வேறு மஹல்லாக்களை சேர்ந்த பலர் பெரும்திரளாக கலந்துகொண்டனர். விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.
நல்லது நடக்கட்டும்,
ReplyDelete//நல்லது நடக்கட்டும்,//
ReplyDeleteஅதிரை போஸ்ட்மேன் அவர்களே........
நல்லது (நல்லபாம்பு ) நடக்காது அது ஊர்ந்து செல்லும் பிராணி.ஹீ ஹீ ஹீ .......
இந்த பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்கு வல்ல ரஹ்மானுக்கு நன்றி சொல்கிறேன், இன்னும் பல ஆலிம் மற்றும் ஹாபிஸ்கள் உருவாகி நம் ஊருக்கு பெருமை சேர துவா செய்வோம்...
ReplyDeleteஅன்புடன்
மான் ஷேக்
இந்த பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்கு வல்ல ரஹ்மானுக்கு நன்றி சொல்கிறேன், இன்னும் பல ஆலிம் மற்றும் ஹாபிஸ்கள் உருவாகி நம் ஊருக்கு பெருமை சேர துவா செய்வோம்... அன்புடன் . . . . . . . . ஜம் ஜம் அஸ்ரப்
ReplyDelete