.

Pages

Saturday, June 7, 2014

அதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா !

அதிரையின் நல்லடையாளங்களுள் ஒன்று அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி. இக்கல்லூரி வருடந்தோறும் ஆலிம்கள் பலரை உருவாக்கி அனுப்பி வைத்த சிறப்பை தொடர்ந்து பெற்றுவருகிறது.

இன்று [ 07-06-2014 ] காலை 9 மணியளவில் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

L.M.S. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் K.T. முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை அல் மதினத்துல் இல்ம் கல்லூரியின் முதல்வர் A. முஹம்மது ஷப்பீர் அலி ஆலிம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். இதில் அதிரையின் பல்வேறு மஹல்லாக்களை சேர்ந்த பலர் பெரும்திரளாக கலந்துகொண்டனர். விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.

4 comments:

  1. நல்லது நடக்கட்டும்,

    ReplyDelete
  2. //நல்லது நடக்கட்டும்,//

    அதிரை போஸ்ட்மேன் அவர்களே........

    நல்லது (நல்லபாம்பு ) நடக்காது அது ஊர்ந்து செல்லும் பிராணி.ஹீ ஹீ ஹீ .......

    ReplyDelete
  3. இந்த பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்கு வல்ல ரஹ்மானுக்கு நன்றி சொல்கிறேன், இன்னும் பல ஆலிம் மற்றும் ஹாபிஸ்கள் உருவாகி நம் ஊருக்கு பெருமை சேர துவா செய்வோம்...


    அன்புடன்

    மான் ஷேக்

    ReplyDelete
  4. இந்த பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்கு வல்ல ரஹ்மானுக்கு நன்றி சொல்கிறேன், இன்னும் பல ஆலிம் மற்றும் ஹாபிஸ்கள் உருவாகி நம் ஊருக்கு பெருமை சேர துவா செய்வோம்... அன்புடன் . . . . . . . . ஜம் ஜம் அஸ்ரப்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.