.

Pages

Monday, February 2, 2015

நமதூரில் இணைவைப்பு இல்லாத 'தூய்மை மஸ்ஜீத்' திட்டம் செயல்படுத்தப்படுமா ?

பிஸ்மில்லாஹ்…

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது நபி முஹம்மத் ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தராத மௌலூது இணைவைப்புப் பாடல்களை இபாதத்தாக மஸ்ஜித்களில் அரங்கேற்றுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மஸ்ஜித்கள் ஒவ்வொன்றாக ஓரிறைவனான அல்லாஹ்வை வணங்குவதற்குத் தகுதியற்றதாகி வருவது வேதனையளிக்கிறது!

இந்த மாதம் செக்கடி பள்ளியில் நடந்தது போல், சென்ற மாதம் இவ்வாறான நிகழ்சி நடந்ததை விமர்சித்து இணையதளத்தில் வந்த இரு கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

1. "இது ஒரு செய்தியா,
(நானும் முதலில் இவ்வாறான கருத்தையே கொண்டிருந்தேன்! இப்படியான (கெட்ட)செய்தியும் இங்கு வருவதால் தானே அதற்கு மறுப்பாக/மாற்றாக அத்"தீமை"யைத் தடுக்கச் சொல்லி நல்ல செய்திகள் எழுத வாய்ப்பு கிடைக்கிறது!)

2.  "****ஹஜ்ரத் அவர்கள் (இப்பள்ளியின் இமாம்) கடந்த வருடம் ஹஜ் செய்து பாவமன்னிப்பிலிருந்து பாலகனாக சென்ற பின்னும் இந்த ஷிர்கான மௌலூதை விடுவதாக இல்லையா? ஷிர்க்கைவிட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக.."

இரண்டாமவரின் கருத்தைப் படித்த உடன் "எய்தவனிருக்க அம்பை நோகலாமா?" என்ற முதுமொழியே என் நினைவில் வந்தது.

நம் பள்ளிகளுக்குத் தொழ வருபவர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் மார்க்க விழிப்புடன் இருந்தால் அந்த இமாமே விரும்பினாலும் இவ்வாறான மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களான மௌலூது என்ற இணைவைப்புப் பாடல்களை அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் அரங்கேற்ற இயலாதல்லவா?

அந்த இமாமை விமர்சித்து கருத்து எழுதியிருந்தவர் கவனிக்கத் தவறியவை சில நம் சிந்தனைக்கு:
1. அந்த இமாம் இணைவைப்புச் செயலை முன்னின்று நடத்துகிறாரே அவரைப் பின்பற்றி நாம் தொழலாமா?

2. அந்த மௌலூது நிகழ்வில் கலந்து கொண்ட, அந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படத்தொகுப்பில் இடம்பெற்ற ஒருவர் நமதூரில் பிரபலமான ஹஜ் சேவை நிறுவனம் நடத்துகிறார்! அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவருக்கு நாம் ஆதரவளிக்கிறோம்! அவரது ஹஜ் சேவை நிறுவனத்தின் மூலம் நாம் ஹஜ்/உம்ராவுக்குச் சென்று அவரது வியாபாரத்திற்கு ஆதரவளிக்கலாமா? மற்றும் அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் முன் தண்டனையில் இருந்து தப்ப முடியுமா?

3. இதே நம் பள்ளி நிர்வாகத்தினர், மார்க்க/கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை எல்லாம் நடத்துகின்றனர்! இவை எல்லாம் சொல் ஒன்று, செயல் வேறான முரணான (முனாஃபிக்கான) நயவஞ்சகச் செயல்களில்லையா?

4. நம் பள்ளிகளின் நிர்வாகத்தினர் இஸ்லாத்தின் ஓரிறைக்கோட்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான இணைவைப்புச் செயல்களை அரங்கேற்ற அனுமதிப்பதன் மூலம் அல்லாஹ்வின் இல்லங்களான மஸ்ஜிதுகளை அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்றதாக்குகின்றதை அவர்கள் உணர்ந்து நம் மஸ்ஜிதுகளை இவ்வாறான இணைவைப்புத் தீமைகளில் இருந்து தடுத்துத் தூய்மைப் படுத்துவது எப்போது?!

5. இஸ்லாத்தில் "நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது" பிரித்துப் பார்க்க முடியாத ஒரே செயல். நமதூர் அனைத்து மஸ்ஜிதுகளிலும் தடையில்லாது நன்மையை எத்திவைக்கும் தப்லீஃக் ஜமாஅத்தினர் நன்மையை ஏவுவதோடு நின்று விடாமல் நம் மஸ்ஜிதுகளில் நடக்கும் இவ்வாறான இணைவைப்பு மௌலூதுத் "தீமை"களைத் தடுக்க வேண்டாமா?

6. நன்மையை ஏவுவது எளிது. எவரும் எதிர்க்கமாட்டார்; தீமையைத் தடுப்பதே கடினம். அதிலும் அதிக நன்மை இருக்கிறது. தீமை அகன்று விட்டாலே இன்ஷாஅல்லாஹ் நாமும் முயன்றால் நன்மை தானாக வந்து விடும். தீமைகளிருக்க அதைத்தடுக்காது நன்மைகளை மட்டும் ஏவிக்கொண்டிருந்தால் இவ்வாறான இணைவைப்புத்தீமைகளோடு சேர்ந்த நன்மையால் என்ன பயன் ?

7. இவ்வாறான அநியாயங்களை எல்லாம் நம் ஊர் மக்கள், அறிஞர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?

இன்னும் பல…

"மக்கள் எவ்வழியோ அவ்வாறே தலைவனும்" என்பது போல நமதூரின் பெரும்பாலான மக்களின் மனநிலைக்கேற்றவாறே நம் மஸ்ஜிதுகளின் இமாம்களும் இருக்கிறார்கள். மஸ்ஜித்களில் நடக்கும் இவ்வாறான இணைவைப்புச் செயல்களுக்கு பொதுமக்களான நாமும் அந்தந்த மஸ்ஜித் நிர்வாகமும் தான் பொருப்பேற்க வேண்டும். அதை விடுத்து ஏழை ஊழியரான அந்த மஸ்ஜிது இமாமை மட்டும் குற்றம் சொல்வது பொதுமக்களான நமது கடமையிலிருந்து தப்பிக்கும் செயல்! கயமையும் கூட.

எவருக்கும் அஞ்சாமல் நமக்கு இஸ்லாத்தை எத்திவைத்த அறிஞர்கள் எல்லாம் நம்மை விட்டுச் சென்று விட்டார்கள். பொதுமக்களான நாம் மார்க்க விழிப்புணர்வு அடையாதவரை இதற்கு விடையில்லை.

மோடியின் ஆட்சியில் பம்மாத்து "தூய்மை இந்தியா" திட்டம் பிரபலமான இத்தருணத்தில் நமதூர்களிலும் இணை வைப்பில்லாத "தூய்மை மஸ்ஜிதுகள்" திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்; செயல்படுவோம்.

- ஷாஃபி M I

14 comments:

  1. மார்க்கத்தை கற்று நன்மையை ஏவி தீமையை வன்மையாக தடுக்க வேன்டிய உலமாக்கள் மவுனம் சாதிப்பதனால்தான்.தங்களுக்கு அங்கிகாரம் கிடைக்கிறது என்று மனப்பால் குடித்தவர்களாக இது போன்ற செயல்க்ளை மொவ்ளுது பித்தர்கள் ஒவ்வொரு பள்ளியிளும் அரேங்ற்றி வருகிறார்கள்.

    நாளை மறுமையில் அல்லாஹ்வின் பிடியில் இருந்து உலமாக்கலே நீங்கள் தப்ப முடியாது.

    சொல்ல வேண்டியதை தெளிவாகவும் பகிரங்கமாகவும் சொல்லிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு

    Muhammad abubacker ( LMS )திங்கள், பிப்ரவரி 02, 2015 11:11:00 முற்பகல்
    தகுதியற்றவர்கள் இறைவனின் இல்லத்தை நிர்வகிக்கப்படும் போது.இது போன்ற பிதத்துக்கள் அரங்கேறுவது ஆச்சிரியப்படுவதற்க்கிள்ளை.

    ReplyDelete
    Replies
    1. உலமாக்கள் என்று மதரசாவில் சொல்பவர்களிடம் உங்களால் ஒரு துளிகூட நெருங்கக்கூட முடியாது என்று சொவதிலும் நியாயம் உண்டு.

      Delete
  2. எவருக்கும் அஞ்சாமல் நமக்கு இஸ்லாத்தை எத்திவைத்த அறிஞர்கள் எல்லாம் நம்மை விட்டுச் சென்று விட்டார்கள். பொதுமக்களான நாம் மார்க்க விழிப்புணர்வு அடையாதவரை இதற்கு விடையில்லை.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

    சகோதர்களே, ஏன் ஷிர்கான காரியத்திற்கு உடன் செல்கிருகிர்கள்,

    அல்ஹம்துலில்லாஹ் ( எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ) என்று சொல்லும் நாவிலே நபியையும் புகழ் பாடுகிர்கள்,

    நபியின் மீது அன்பு இருந்தால் அவர்கள் மீது சலாம் கூறுங்கள்.

    மௌலூத்தின் அர்த்தம் அறிந்தால் நீங்கள் பாட மாட்டிர்கள்

    சிந்தித்து செயல் படுங்கள்

    கருத்துக்காக
    முஹம்மத் ஷரீப்

    ReplyDelete
  4. ஷிர்க்கானக் காரியம் என்றால் என்ன. சிற்கு என்றால் என்ன ?

    ReplyDelete
  5. உலமாக்கள் என்று மதரசாவில் சொல்பவர்களிடம் உங்களால் ஒரு துளிகூட நெருங்கக்கூட முடியாது என்று சொவதிலும் நியாயம் உண்டு.//

    சகோதரரே தாங்கள் சொல்லும் உலமாக்களிடம் நாங்கள் நெருங்குவதை விட்டும்.நபி (ஸல்) அவர்களை தன் தூதராக அனுப்பிய அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.

    ReplyDelete
  6. உலமாக்கள் என்று மதரசாவில் சொல்பவர்களிடம் உங்களால் ஒரு துளிகூட நெருங்கக்கூட முடியாது என்று சொவதிலும் நியாயம் உண்டு.//

    சகோதரரே தாங்கள் சொல்லும் உலமாக்களிடம் நாங்கள் நெருங்குவதை விட்டும்.நபி (ஸல்) அவர்களை தன் தூதராக அனுப்பிய அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்லும் உலமாக்கள் என்று சொல்வதின் உள் அர்த்தம்தான் என்ன ?

      விளங்கியவாறு எழுதும்போது விளக்கம் கேட்டால் எதையாவது எழுதுவது நியாயம் அன்று !

      Delete
  7. ஷிர்க்கானக் காரியம் என்றால் என்ன. சிற்கு என்றால் என்ன ?//

    எல்லா புகழும் இறைவனுக்கே.

    அறியாமையின் வெளிபாடால் வந்த கேள்வி என்றே தீர்க்கமாக சொல்லலாம்.

    ReplyDelete
  8. ஷிர்க்கானக் காரியம் என்றால் என்ன. சிற்கு என்றால் என்ன ?//

    எல்லா புகழும் இறைவனுக்கே.

    அறியாமையின் வெளிபாடால் வந்த கேள்வி என்றே தீர்க்கமாக சொல்லலாம்.

    ReplyDelete
  9. எதையாவது எழுதுவது என்றும் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு தவறுகள் செய்வதை என்ன சொல்ல !

    சிர்க்கு என்றால் அண்ணாவென்று அறியக் கேட்டால் அறியாமையின் வெளிப்பாடால் வந்த கேள்வி என்பது எந்தவிதத்தில் நியாயம் ? சிர்க்கான காரியம் என்று எழுதும்போது சிர்க்கை பற்றி தெரியாமல் எழுதுவதும் என்ன நியாயம் ?

    ReplyDelete
  10. //நமது நபி முஹம்மத் ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தராத மௌலூது இணைவைப்புப் பாடல்களை இபாதத்தாக மஸ்ஜித்களில் அரங்கேற்றுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மஸ்ஜித்கள் ஒவ்வொன்றாக ஓரிறைவனான அல்லாஹ்வை வணங்குவதற்குத் தகுதியற்றதாகி வருவது வேதனையளிக்கிறது!//

    கட்டுரையாளர் அதிரை சரித்திரம் அறிந்ததில் மாறுபடுகிறேன். அத்ரையில் உள்ள அனைத்துப் பள்ளியிலும் எப்போதும் போல்தான் தொழுது வருகிறார்கள். இன்று புதிதாக தோன்றிய இரண்டு பள்ளியில்தான் புதுமாதரியாக தொழுவதாக பேசிக்கொள்கிறார்கள். கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்பமுடியவில்லை. எதையோ மனதில் நம்பி அதற்க்கு சாதகமாக எப்படியும் எழுதலாம் என்பதை ஏற்கத்தான் முடியுமா !

    ReplyDelete
  11. வலைதளத்தில் பின்னூட்டமிட்ட செய்திகளில் தனக்கு சாதகமானவைகளை எடுத்து செய்தியாகப் போடுவதில் என்னதான் சுகமோ ! சேகரித்த செய்திகளும் பெரும் பெரும் அரபி பல்கலைக்கழகங்களில் இருந்து பத்துவா தந்ததுப்போல் ஒருதலைப்பிட்டு எழுதி, தன் வெறுப்பைக்காட்ட தருணங்களை பயன்படுத்தியதுதான் என்ற உண்மை, படிக்கும்போது பளிச்சென்று தெரியாமல் போகவில்லை. ஒரு செய்தி தனக்கு முழுமையாகத் தெரியாவிட்டால் அதனை ஏனோதானோவென்று ஊடகத்தில் வெளியிடுவதால் அல்லாஹ்வின் பயம் குறைத்து செல்கிறது என்று சொல்வதைத்தவிர வேறு என்னச் சொல்வது !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.