.

Pages

Tuesday, February 10, 2015

முகமது நபியை அவமதிப்பதா ? லண்டனில் இஸ்லாமியர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் !

இஸ்லாமிய இறைதூதரான முகமது நபியை அவமதித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட ’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சார்லி ஹெப்டோவின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் மதநம்பிக்கையை புண்படுத்தியுள்ளது என கூறிய Muslim Action Forum (MAF) சார்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனையடுத்து லண்டனில் உள்ள Downing Street பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அந்த பத்திரிக்கையை கண்டிக்கும் விதத்தில் ‘சார்லி ஹெப்டோ ஒரு மோசடி பத்திரிக்கை’, ‘சார்லி ஹொப்டோ பத்திரிக்கை நாகரீகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Muslim Action Forum(MAF) அமைப்பை சேர்ந்த Shaykh Tauqir Ishaq என்பவர், பத்திரிகையின் வளர்ச்சிக்காக ஒரு மதத்தை இழிவுப்படுத்துவது சரியில்லை என்று தெரிவித்தார்.

மேலும் பத்திரிக்கை அலுவலகம் தாக்குதலில் 12 பேர் பலியானது மிகவும் கண்டிக்கத்தக்கது எனக்கூறிய அவர், இஸ்லாமிய அமைப்புகளிடம் முறையான சட்டத்திட்டங்கள் இல்லாததையே இந்த தாக்குதல் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அமைப்பு நடத்திய கையெழுத்து போராட்டத்தில் சுமார் 10,000 இஸ்லாமியர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நபி (ஸல் ) அவர்களை கிண்டலித்து கார்ட்டூன் வரைந்தவனுக்கு எதிர்ப்பு தெருவிக்க எந்த இயக்கமும், அமைப்பும், கட்சியும் போராட்டம் நடத்தாதது வியப்பாக உள்ளது, மற்றதுக்கெல்லாம் போராட்டம் அது இதுன்னு நடத்தி தன்னை நினைவு படுத்தி கொள்கிறார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.