இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியை முனைவர் பரீதா பேகம் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியை ஜைனபா பேகம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 'தமிழ்நாட்டில் இஸ்லாமிய கட்டிட கலை' என்ற தலைப்பிலும், 'ஏழரை பங்காளி வகையறா' என்ற நாவலின் அடிப்படையில் 'இஸ்லாமிய வாழ்வியல் சிந்தனை' என்ற தலைப்பிலும் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், சிங்கப்பூர் பிரதமர் லி ஹிஸின் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியை முனைவர் பரீதா பேகம், பேராசிரியை ஜைனபா பேகம் ஆகியோருக்கு சான்றிதல் மற்றம் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த தமிழ் மொழி வல்லுனர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
கல்லூரி வரலாற்றில் வெளிநாடு சென்று கட்டுரைகள் சமர்ப்பித்து சான்றிதல் மற்றம் கேடயம் பெற்றிருப்பது இதுதான் முதல் தடவை என கூறப்படுகிறது. மேலும் மலேசியா வாழ் முன்னாள் நமது கல்லூரி மாணவர்கள் பலர் பேராசிரியைகள் பரீதா பேகம், ஜைனபா பேகம் ஆகியோருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர்.


Please Correct the Date form 29-01-2015 instead of 29-02-2015.
ReplyDeletethanks brother, it's corrected
ReplyDelete