முன்னதாக அதிரை காவல்துறை ஆய்வாளராக திரு ரவிச்சந்திரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கூடுதல் பொறுப்பாக அதிரை அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் கவனித்து வந்தார்.
இந்நிலையில் இன்று முதல் அதிரை காவல்துறை ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கு சக போலீசார்கள் - பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் - சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
காவல்துறை ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் அவர்களை பற்றிய சிறு குறிப்பு:
இவரது சொந்த ஊர் மன்னார்குடி. முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். தஞ்சை மெடிக்கல் காலேஜ், திருவிடைமருதூர், கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றினார். இதன் பிறகு கடந்த [ 28-06-2014 ] அன்று இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நடுக்காவேரி என்ற ஊரில் பணியாற்றினார். இன்று முதல் அதிரை காவல் துறை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார்.
'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்:



Congratulations. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிகமாக பொது சேவயில் இடுபட்டிற்க்கும் மரைக்காவுக்கு நன்றி
ReplyDeleteகாவல்துறை அய்யா ஆனந்த தாண்டவம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteமக்களின் நன்மதிப்பை பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிகமாக பொது சேவயில் இடுபட்டிற்க்கும் மரைக்காவுக்கு நன்றி
ReplyDeleteபுதிய காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துக்கள். அமைதிப் பூங்காவான அதிரை தொடர்ந்து அமைதியாக இருக்க புதிய காவல்துறை அதிகாரியின் பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் அதிரை நியூஸ் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ள சகோ. இத்ரீஸ் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும்.
ReplyDelete