.

Pages

Saturday, May 16, 2015

அதிரையில் உண்ணாவிரத போராட்டம்: நேரடி ரிப்போர்ட் !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.

பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை அருகே இன்று [ 16-05-2015 ] காலை 9 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

உண்ணாவிரதம் துவங்கிய சில நிமிடங்களில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் உண்ணாவிரத போராட்டம் குறித்து உரையாற்றினார். இதை தொடர்ந்து  ஊர் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் 24 மணிநேர மருத்துவ சேவையின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.

இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன் ஆகியோர் உண்ணாவிரத பந்தலுக்கு நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசின் சார்பில் கூடுதல் மருத்துவர் நியமனம் செய்யப்பட்ட ஆணையை பொதுமக்களிடம் வாசிக்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். D. மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின் ஆகியோர் அதிரை பேரூராட்சி தலைவருக்கு குளிர் பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

அரசின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியில் பொறுப்பேற்பார் எனக்கூறப்படுகிறது. இவர் அதிரையில் முழுமையாக தங்கி மருத்துவ சேவையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

உண்ணாவிரத முடிவில் கோரிக்கை வெற்றிபெற காரணமாயிருந்த  தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். D. மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின், ஊர் அனைத்து ஜமாத் தலைவர்கள், கிராம பஞ்சாயத் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிரை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இரவு நேர மருத்துவ சேவைக்காக கூடுதல் மருத்துவர் நியமனம் தொடர்பாக பிறபிக்கப்பட்ட உத்தரவு கடிதம்:

12 comments:

  1. ஆதரவு அளித்தவர்களுக்கு ஒரு கேள்வி இவ்வளவு செய்த சேர்மன் அதே அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஈசிஆர் முதல் மருத்துவமனை வரை உள்ள சாலையை சரி செய்வாரா?

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் ரோட்டுக்கு ரோடு சரி பண்ணினாரா என்று கேட்கிறீர்கள் இன்னொருத்தர் சின்ன சிங்கப்பூரா மாற்றினாரா என்று கேட்கிறார் இன்னும் ஒரு சில பகுதியில் ரோடு இல்லேயே, " ஏம்மா இப்படி பண்ணுறீங்க "

      முக்கியமான பகுதியில் திறம்பட செய்துள்ளார் என்று சொல்லலாம்.

      Delete
    2. // முக்கியமான பகுதியில் திறம்பட செய்துள்ளார் என்று சொல்லலாம்.// மருத்துவமனை சாலை முக்கியமானதல்லவா?

      Delete
  2. இரவு நேர மருத்துவர் நியமிப்பதில் இவ்வளவு இடற்பாடுகள் இருக்கும் போது இனி சிகிச்சை எப்படியென்று தெரிய வரும் விபத்தில் சிக்கியவருக்கு "கோல்டன் ஹவர்ஸ்" என்று சொல்லக்கூடிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் அதற்க்கான மருத்துவ வசதிகள் / சிறப்பு மருத்துவர் உள்ளனவா என்று யாருக்கு தெரியும்? முதன் முதலாக உண்ணாவிரதப் போராட்டத்திற்காக வந்தவர்களை பாராட்ட வேண்டும் ஏன்னா இதற்க்கு முன் வராவிட்டாலும் ஏழைகளின் நிலைமை உணர்ந்து வந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சேர்மன் அவர்களே!

    ReplyDelete
  3. நூர் அவர்களே நீங்கள் கேட்பது சரிதான், ஆனால் ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். இதுவரை எதுவும் செய்யாதவரைக்கேட்பதுபோல் இருக்கிறது உங்கள் கேள்வி. வரும் ஒவ்வொன்றாக வரும். அதிரை எக்ஸ்ப்ரஸில் பார்த்தீர்களா? உண்ணாவிரதத்திற்கு வந்தவர்களை கேடும்பு சொல்லி அனுப்பினார்களாம். சேர்மன் அவர் சொந்த ஆதாயத்திற்கா இதை செய்கிறார்?. துணை நிற்கணும் அல்லது ஒதிங்கி நிற்கணும். கெடுவான் கேடு நினைப்பான்.

    இப்படி பட்டவர்கள் இருக்கும்பொழுது எங்கிருந்து நிதி வரும் சாலைகள் அமைக்கவும் செப்பனிடவும்?. இருந்தாலும் ஒவ்வொன்றாக செய்வார். 40 ஆண்டுகள் ஆண்டவர்கள் செய்யாததை செய்து கொண்டிருக்கிறார். பாராட்டுவோம், ஊக்குவிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. பழைய போஸ்டாபீஸ் பகுதியில் பைக் ஓட்டிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்

      Delete
  4. ஏழைகளின் நிலைமை உணர்ந்து வந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சேர்மன் அவர்களே!

    ReplyDelete
  5. தொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  6. தொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  7. சேர்மனின் சேவை திருப்தி அளிக்கிறது

    ReplyDelete
  8. தொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  9. தொடர் போராட்டத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய அதிரை சேர்மன் அவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.