அதிரை நியூஸ்: டிச.30
13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீதிமன்றம்.
தாய்லாந்தில் 'புடித் கிட்டித்ரடிலோக்' என்ற 34 வயது நபர் 'ஒருத்தன ஏமாத்தனும்னா முதல்ல அவனோட ஆசைய தூண்டனும்' என்ற புகழ்பெற்ற வசனத்திற்கேற்ப பல மோசடி நிறுவனங்களைத் துவக்கி சுமார் 160 மில்லியன் டாலர்களை (சுமார் 120 மில்லியன் யூரோக்கள்) சுமார் 40,000க்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ஆட்டையை போட்டுள்ளார்.
நிறைய லாபம் தருவதாக சொன்ன படித் துவங்கியது எல்லாமே வெறும் லட்டர்பேடில் மட்டுமே செயல்பட்ட நிறுவனங்கள் தான். எனவே இவர் மீது சுமார் 2,653 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2 குற்றங்கள் புடித் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் சுமார் 13,000 சொச்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 6,637 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தால் போதும் என சலுகை வழங்கப்பட்டது. கேலிக்கூத்து இத்துடன் நின்றுவிடவில்லை. தாய்லாந்து சட்டப்படி ஒரு குற்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தால் போதுமானாது என்பதால் 2 குற்றங்களுக்கும் சேர்த்து 20 ஆண்டுகள் உள்ளே இருந்து விட்டு வெளியே வந்து விடலாமாம். அப்புறம் என்ன கூந்தலுக்கு 13,000, 6,657 ஆண்டுகள் சிறை என கனவிலும் நடக்காத காரியத்தை தண்டனையாக வழங்க வேண்டும்?
ஊர்ஜிதம் செய்யப்பட்ட அந்ந 2 குற்றங்களின் மீது புடித் நடத்தி வந்த 2 நிறுவனங்கள் 20 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகையை கொண்டு வட்டியுடன் 2,653 முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போ முதலீடு, வரும் ஆனா வராது.
Source: BBC News / Msn
தமிழில்: நம்ம ஊரான்
13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீதிமன்றம்.
தாய்லாந்தில் 'புடித் கிட்டித்ரடிலோக்' என்ற 34 வயது நபர் 'ஒருத்தன ஏமாத்தனும்னா முதல்ல அவனோட ஆசைய தூண்டனும்' என்ற புகழ்பெற்ற வசனத்திற்கேற்ப பல மோசடி நிறுவனங்களைத் துவக்கி சுமார் 160 மில்லியன் டாலர்களை (சுமார் 120 மில்லியன் யூரோக்கள்) சுமார் 40,000க்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ஆட்டையை போட்டுள்ளார்.
நிறைய லாபம் தருவதாக சொன்ன படித் துவங்கியது எல்லாமே வெறும் லட்டர்பேடில் மட்டுமே செயல்பட்ட நிறுவனங்கள் தான். எனவே இவர் மீது சுமார் 2,653 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2 குற்றங்கள் புடித் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் சுமார் 13,000 சொச்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 6,637 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தால் போதும் என சலுகை வழங்கப்பட்டது. கேலிக்கூத்து இத்துடன் நின்றுவிடவில்லை. தாய்லாந்து சட்டப்படி ஒரு குற்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தால் போதுமானாது என்பதால் 2 குற்றங்களுக்கும் சேர்த்து 20 ஆண்டுகள் உள்ளே இருந்து விட்டு வெளியே வந்து விடலாமாம். அப்புறம் என்ன கூந்தலுக்கு 13,000, 6,657 ஆண்டுகள் சிறை என கனவிலும் நடக்காத காரியத்தை தண்டனையாக வழங்க வேண்டும்?
ஊர்ஜிதம் செய்யப்பட்ட அந்ந 2 குற்றங்களின் மீது புடித் நடத்தி வந்த 2 நிறுவனங்கள் 20 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகையை கொண்டு வட்டியுடன் 2,653 முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போ முதலீடு, வரும் ஆனா வராது.
Source: BBC News / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.