அதிரை நியூஸ்: டிச.24
சோதனை முயற்சியாக துபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் டேக்ஸிக்கள் அறிமுகம்.
பெட்ரோலியத்திற்கு மாற்று சக்திகளை கண்டறிவதிலும், அறிமுகப்படுத்துவதிலும் துபை எப்போதுமே முன்னனியில் இலங்குகிறது. தற்போது மின்சக்தியில் இயங்கும் கார்கள் அறிமுகமாகின்ற நிலையில் முழுமையாக ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் வாகனங்களாக டயோட்டா மிராய் ரக (Toyota Mirai) கார்களை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
துபை சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படும் லிமோசின் ரக டேக்ஸிக்களான இவைகள் வெற்றிபெற்றால் துபை போக்குவரத்து துறையில் கணிசமாக இணைக்கப்படும். இந்த கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் புகைகளை உமிழாது மாறாக தண்ணீரை மட்டுமே வெளியேற்றும்.
எஞ்சினிலிருந்து சத்தம் வராது, ஒரு சில நிமிடங்களிலேயே ஹைட்ரஜன் டேங்கை நிரப்பிக் கொள்ளலாம். ஒருமுறை நிரப்பப்படும் ஹைட்ரஜனை கொண்டு 500 கி.மீ வரை வாகனத்தை இயக்கலாம் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
முதன்முறையாக அல் புத்தைம் வாகன விற்பனையகம் சார்பாக இத்தகைய கார்களுக்கு ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை துபை பெஸ்டிவல் சிட்டி அருகே துவக்கியுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சோதனை முயற்சியாக துபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் டேக்ஸிக்கள் அறிமுகம்.
பெட்ரோலியத்திற்கு மாற்று சக்திகளை கண்டறிவதிலும், அறிமுகப்படுத்துவதிலும் துபை எப்போதுமே முன்னனியில் இலங்குகிறது. தற்போது மின்சக்தியில் இயங்கும் கார்கள் அறிமுகமாகின்ற நிலையில் முழுமையாக ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் வாகனங்களாக டயோட்டா மிராய் ரக (Toyota Mirai) கார்களை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
துபை சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படும் லிமோசின் ரக டேக்ஸிக்களான இவைகள் வெற்றிபெற்றால் துபை போக்குவரத்து துறையில் கணிசமாக இணைக்கப்படும். இந்த கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் புகைகளை உமிழாது மாறாக தண்ணீரை மட்டுமே வெளியேற்றும்.
எஞ்சினிலிருந்து சத்தம் வராது, ஒரு சில நிமிடங்களிலேயே ஹைட்ரஜன் டேங்கை நிரப்பிக் கொள்ளலாம். ஒருமுறை நிரப்பப்படும் ஹைட்ரஜனை கொண்டு 500 கி.மீ வரை வாகனத்தை இயக்கலாம் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
முதன்முறையாக அல் புத்தைம் வாகன விற்பனையகம் சார்பாக இத்தகைய கார்களுக்கு ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை துபை பெஸ்டிவல் சிட்டி அருகே துவக்கியுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.