தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மேலஉளுர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (20.12.2017)புதன்கிழமை பார்வையாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
இன்றைய தினம் கிராமங்களில் தூய்மை நாள் கொண்டாடப்படுகிறது. தூய்மை விழிப்புணர்வு தொடர்பாக நமது மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராமங்களில் தூய்மை நாள் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (20.12.2017) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் முக்கிய நோக்கம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமங்களில் பாதுகாப்பான கழிப்பறை பயன்படுத்துவது குறித்தும், வீட்டை சுற்றி குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிப்பது குறித்தும், வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பாதுகாப்பது குறித்தும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டாமல் தூய்மையாக பராமரித்தல் குறித்தும் போன்றவைகளை பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தனி நபர் இல்ல கழிப்பறை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மை குறித்தும் இந்த கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 3,78,995 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கிராமப்புறங்களில் 2,30,300 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டி மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், தற்பொழுது 1,48,700 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் வருகிற 31.12.2017க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. கழிப்பறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.12,000 மானியமாக வழங்கி வருகிறது. கழிப்பறை பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமாக வாழ்வதற்கும் வழிவகுக்கும்.
மேலஉளுர் ஊராட்சியில் 879 குடியிருப்புகள் உள்ளது. இதில் 809 குடியிருப்புகளில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியானது 31.12.2017க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. மேலஉளுர் ஊராட்சி தூய்மையை கடைப்பிடிக்க முழு சுகாதார கிராமமாக அறிவிக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் வருகின்ற ஜனவரி 02.01.2018 முதல் முழு சுகாதாரம் கடைப்பிடிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்;சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
முன்னதாக ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமங்களில் தூய்மை நாள் தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து முழு சுகாதாரம் முன்னோடி தமிழகம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன்,விஜய், உதவி செயற்பொறியாளர் இளஞ்சேரன், மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர்(சிறு சேமிப்பு) ஜெ.ரோஸ்லீன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
இன்றைய தினம் கிராமங்களில் தூய்மை நாள் கொண்டாடப்படுகிறது. தூய்மை விழிப்புணர்வு தொடர்பாக நமது மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராமங்களில் தூய்மை நாள் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (20.12.2017) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் முக்கிய நோக்கம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமங்களில் பாதுகாப்பான கழிப்பறை பயன்படுத்துவது குறித்தும், வீட்டை சுற்றி குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிப்பது குறித்தும், வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பாதுகாப்பது குறித்தும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டாமல் தூய்மையாக பராமரித்தல் குறித்தும் போன்றவைகளை பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தனி நபர் இல்ல கழிப்பறை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மை குறித்தும் இந்த கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 3,78,995 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கிராமப்புறங்களில் 2,30,300 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டி மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், தற்பொழுது 1,48,700 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் வருகிற 31.12.2017க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. கழிப்பறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.12,000 மானியமாக வழங்கி வருகிறது. கழிப்பறை பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமாக வாழ்வதற்கும் வழிவகுக்கும்.
மேலஉளுர் ஊராட்சியில் 879 குடியிருப்புகள் உள்ளது. இதில் 809 குடியிருப்புகளில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியானது 31.12.2017க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. மேலஉளுர் ஊராட்சி தூய்மையை கடைப்பிடிக்க முழு சுகாதார கிராமமாக அறிவிக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் வருகின்ற ஜனவரி 02.01.2018 முதல் முழு சுகாதாரம் கடைப்பிடிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்;சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
முன்னதாக ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமங்களில் தூய்மை நாள் தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து முழு சுகாதாரம் முன்னோடி தமிழகம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன்,விஜய், உதவி செயற்பொறியாளர் இளஞ்சேரன், மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர்(சிறு சேமிப்பு) ஜெ.ரோஸ்லீன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.