.

Pages

Tuesday, December 26, 2017

மேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ~ தொற்றுநோய் பரவும் அபாயம்!

அதிராம்பட்டினம், டிச.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட  மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டவை. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெறப்படும் குடிநீர் இந்த நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மறுநாள் காலையில் மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, காட்டுப்பள்ளி தெரு, காலியார் தெரு, நடுத்தெரு ஒரு பகுதி, கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மேலத்தெரு 16 வது வார்டு பகுதியில் நீர்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அதன் அருகே அமைந்துள்ள வடிகாலில் குடியிருப்பு கழிவுநீர் செல்வதால், பிரதான குழாயில் கழிவு நீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கலக்கமடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது;
'கடந்த 4 மாதங்களாக இப்பிரச்சனை இப்பகுதியில் இருந்து வருகிறது. வடிகாலில் செல்லும் குடியிருப்பு கழிவுநீர் நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் உடைந்துபோன பிரதான குழாயில் கலந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி பலரை தாக்கியது.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பேரூராட்சி பணியாளர்கள் உடைந்தபோன பிரதான குழாயை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், அடுத்து சில தினங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, முன்பு இருந்ததைவீட தற்போது அதிகமாக குடிநீர் வெளியேறி வீணாகிறது. மீண்டும் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் கலக்கமடைந்துள்ளோம்.  சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்' என்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.