.

Pages

Sunday, December 31, 2017

அரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ஆலோசனை !

அதிரை பாருக்
அவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது

என்ன சொன்னார்? என்ன சொல்கிறார்? நாளை என்ன சொல்வார்?
1996 முதல் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் திரு. ரஜினிகாந்த் அவர்களைப் பற்றித்தான் என்னுடைய கருத்துக்களை பதிவிட விரும்புகின்றேன். இதன் மூலம் ஒட்டுமொத்த கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் அவரது படை வீரர்களான ரசிகர்களுக்கும் நுணுக்கமான பல தகவல்கள் உள்ளன.

அரசியலுக்கு நான் புதிதல்ல என்பதும், அரசியலின் ஆழம் (Political Depth) தெரிந்ததால் தயங்குகிறேன் என்பதும், ஜெயிக்க வீரம் மட்டும் போதாது; வியூகமும் தேவை (மூளை வேலை செய்ய வேண்டுமென தலையில் கையை வைத்து பேசினார்) என அவர் பேட்டி கொடுத்ததையும் பார்த்தோம்; படித்தோம். ஆழம் தெரிந்ததால்.... எவ்வளவு பேசினாலும் என்ன அறிவுரை மக்களுக்கு சொன்னாலும் வழக்கம் போல் மற்ற கட்சிகள் கொடுக்கின்ற பணத்திற்கு அடிமையாகி நம்மை புறக்கணித்து விடுவார்களோ/ முழுமையான வெற்றியை தர மாட்டார்களோ என ஆழ்ந்து சிந்திப்பதைத்தான் ஆழம் என்று அவர் கூறுவதாக, கருதுவதாக நான் கருதுகின்றேன். அந்த  ஆழத்தைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதே என்னுடைய கருத்து.

அரசியலில் SYSTEM கெட்டு விட்டது என்று அவர் ஏற்கனவே ஆதங்கப்பட்டு சொன்னது மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதைப் பற்றித் தான்  என்பதை நான் ஏற்கனவே என்னுடைய  செய்திகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.  1967  முதலே ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் (அப்போது ருபாய் 10, 20 அல்லது 50 என கொடுத்திருக்கலாம்) அது இன்னமும் தொடருகிறது என பல்வேறு அரசியல் கட்சிகளும் பேசுவதை காண முடிகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை என தமிழ்நாட்டில் இருந்த ஒரு தேர்தல் அதிகாரி (திரு. நரேஷ் குப்தா என்பதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது) டெல்லியில் இருந்து பேட்டி கொடுத்ததாக. பத்திரிக்கைகளில் நான் படித்த ஞாபகம் இருக்கிறது. தேர்தல் காலங்களில் அரங்கேறும் விதி மீறல்களை சட்ட விரோதமான செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க
முடியவில்லை என்றால், அவர்கள் அந்த பொறுப்புகளிலிலிருந்து விலகி விட வேண்டும்.

அதே போல் கடவுள் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுப்பவர்கள் அதைத் தங்களால் அரசியலில் காப்பாற்ற முடியாது என்று எண்ணினால் அவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தாரின் நோயற்ற நிம்மதியான வாழ்கைக்காகவும், சுருக்கமாக சொன்னால், கடவுளின் கோபத்திற்கு மக்கள் பலியாகி விடக் கூடாது என்ற தூய எண்ணங்களுடன் தங்களது பதவிகளை (அது எதுவாக இருப்பினும் சரி) விட்டு விலகி நல்லவர்களுக்கு வழி விட வேண்டும். இல்லையென்றால் கடவுள் மீது சத்தியப் பிரமாணம் எடுக்கும் வழிமுறையை அரசியல் சாசனத்தில் இருந்தே நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு தெய்வக் குற்றத்துக்கு ஆளாகி பல்வேறு
இயற்கை பேரழிவுகளால், திடீர் நோய்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை (அது நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு காரனங்களுக்காக ஏற்படுவதை கண்கூடாக காண்கின்றோம்) எச்சரிக்க விரும்புகின்றேன்.

அரசியலில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சி பொற்காலம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் இன்னமும் புகழ்வதைக் காண முடிகிறது. இந்த நாட்டின் பல முக்கிய தலைவர்களால் அவர் போற்றப்பட்டவர். காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானவர் என்பது ஊரறிந்த விஷயம். எனவே, காமராஜர் ஆட்சி அமைப்போம் என கூறுபவர்கள் காங்கிரஸ் கட்சியை எப்படி ஒதுக்க முடியும். ஒதுக்கினால், அதற்குப் பெயர் காமராஜர் ஆட்சியே அல்ல. இப்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது.

தமிழ்நாட்டில் அடுத்தது கூட்டணி ஆட்சி தான் (Coalition Govt) என்பதும் மத்தியில் 2019 ல் காங்கிரஸ்ஆட்சி தான் என்பதும் பல மாதங்களுக்கு முன்பே என்னால் மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் ராகுல் அவர்களுக்கு (Hon’ble Congress President Shri Rahul Gandhi) எழுதப்பட்டு விட்டது. அதற்குத் தோதாக அனுசரித்து வியூகத்துடன் அரசியல் கட்சிகள் செயல்பட்டால் அவர்களுக்கு பலன் உண்டு. போர் வரும் போது பார்க்கலாம் என்று திரு. ரஜினி அவர்கள் சொன்ன கொஞ்ச நாளில் ஒரு சிறிய போர் வந்தது. அந்தப் போர் முடிந்து விட்டது (21.12.2017). அவரது போருக்கான ஒத்திகையாக அவரும் மற்ற கட்சிகளும் இதை பார்கின்றனவா?. 1996 முதல் அவரது ரசிகர்கள் போருக்கு தயாராகவே இருகின்றனர் அப்போது அவர்கள் தூக்கிய துப்பாகிகள் துருப்பிடித்து விட்டதால்  அதை தூக்கி எறிந்து விட்டு புதிய துப்பாகிகளுடன்

2015 முதல் போருக்கு தயாராகிவிட்டனர். இந்த முறை அவர்கள் தூக்கிய துப்பாக்கிகளை கீழே போட தயாராக இல்லை என்பதை அவர்களது உணர்ச்சிபூர்வமான செய்திகள் நமக்கும் அவர்களது படை தளபதிக்கும் உணத்துகின்றன. போர்  தமிழ்நாட்டைக் கடந்து டெல்லி வரை செல்ல வேண்டும் என்பதே அவர்களது தளபதியின் இலக்கு என்பதையே நான் கருதுகின்றேன். போருக்கான தேதியை விரைவில் சொல்கின்றேன். 3  மாதத்தில் சொல்கின்றேன் 2019 ல் சொல்கின்றேன் என்பதையெல்லாம் அவரது சிப்பாய்கள் ஏற்றுகொள்ள தயாராக இல்லை என்பதே என் கணிப்பு.
3  மாதத்தில் போர் வரும் என்று ஒரு தளபதி அறைகூவல் விடுகிறார். எந்தப் போரையும் சந்திக்க எங்கள் சிப்பாய்கள் தயார்  எனவும் 2021  வரை போரே வராது எனவும் அப்போது போர் வந்தாலும் எங்கள் படைதான் வெல்லும் எனவும் இன்னொரு தளபதி ஆக்ரோஷமாக கூறுவதை காண முடிகிறது.போர் வந்தால் யாருக்கு பின்னால் அணிவகுத்து செல்வதென எதிரணி தளபதிகளும் அவர்களது சிப்பாய்களும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். கூடிய விரைவில் அதற்கெல்லாம் முடிவு தெரிந்து விடும். பாவங்கள் அவனால் மன்னிக்க கூடியவை (அவன் நாடியவர்களுக்கு) ஆனால் மன்னித்து விடுவான் என்ற நோக்கில் அடுத்தடுத்து பாவங்களை செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடைக்காது. பாவச் செயல்களில் இருந்து மீண்டு திருந்தி வாழ்பவர்களை நாம் கேலி கிண்டலாக பேசக் கூடாது. காரணம் ஒரு நாள் நாமும் அந்த நிலைக்கே தள்ளப்பட்டு விடுவோம் (நம்மையும் அறியாமல்). உலகில் உண்மையான் ஆன்மீகவாதிகள்  10% பேர் இருப்பார்களா என்பது கேள்விக்குறியான விஷயம். ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா? . அரசியல்வாதிகளிடம் ஆன்மீகம் இல்லாத போது மத சார்பற்ற ஆன்மீகவாதிகள் அரசியலில் நுழைவதை எப்படி தவறு எனக் கூற முடியும். மத சார்பற்ற  நிலையில் மனிதனை மனிதனாக என்னும் போது மட்டும் தான் உண்மையான் ஆன்மீகம் நமக்கு பலன் தரும். திரு ரஜினி அவர்களது அரசியல் பிரவேசம் தொடர்பாக ஏகப்பட்ட செய்திகள், விவாதங்கள் நாள் கணக்கில் ஓடிக்கொண்டிருகின்றன,

திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்வீர்களா? – கேள்வி
இதற்கு அவரது பதில் “ No Comments” காரணம் தான்  சேரவுள்ள அல்லது தன்னிடம் சேரவுள்ள கட்சிகளை குழப்பக்கூடாது என்பதற்காகவே இந்த பதிலை அவர் சட்டென்று கூறியிருக்கலாம். அப்படித்தான் நான் கருதுகின்றேன். அவரது அரசியலுக்கு அவருடைய வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இளைஞர்களையும், திறமையானவர்களையும் ஒதுக்கிவிட்டு 70 முதல் 80  வயதுள்ள அல்லது இதையும் தாண்டியவர்களை எல்லாம் பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களாக நிறுத்துவதை கண்கூடாக காண முடிகிறது. ஒருவரால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தால். அதை எவராலும்  மாற்ற முடியாது அனால் அந்த மாற்றத்திற்கான காரணிகள் எவை என்பததைத் தான் அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். திரு. ரஜினி அவர்களும் அவரது ரசிகர்களும் கூட காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதை காண முடிகிறது.

தமிழகத்தில் 1967 முதல் அரசியலும் திரைத்துறையும் சேர்ந்தே உள்ளன. மேலும் பல மாநிலங்களிலும் திரைத்துறையினரை  அரசியலுக்கு பயன்படுத்தும் நடைமுறை இன்னமும் தொடர்கிறது . 1967 ல் காங்கிரஸ் தோற்று தி.மு.க வென்றது. அப்போது எனக்கு வயது 12  அப்போது நிகழ்ந்த அரசியல்  சம்பவங்கள் பல எனக்கு இன்னமும் நினைவில்  உள்ளது.  விருதுநகர் தொகுதியில் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசன் என்பவர் காமராஜரை தோற்கடித்தார், அதைக் கேட்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் கவலைப் பட்டதும். திரு. M.G.R. அவர்கள் கண்ணீர் விட்டதும் பதிவு செய்யப்பட்ட செய்திகள். காமராஜர் அவர்கள் தோற்றதும் சீனிவாசன் என்பவர் ஜெயித்ததும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி ஆனால் அரசியல் வரலாற்றில் அது ஒரு கருப்பு தினம். அந்த மாணவர் இப்போது உயிருடன் இருந்தால்  (05.01.2009 ல் அவர் காலமாகிவிட்டார்) நான் ஜெயித்த போது சந்தோஷப்பட்டேன் ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒரு பெரும் தலைவர் தோற்க நாம் காரணமாகி விட்டோமே என அடிக்கடி எண்ணி வருத்தப் பட்டேன் என்பதாக கூறுவார். எந்த கட்சிகாரர்களிடம் கேட்டாலும் இதே பதில் தான் வரும் தன்னை தோற்கடித்தவரை காமராஜர் அவர்கள் அழைத்து இதுதான் உண்மையான ஜனநாயகம் என பாரட்டியதாக படித்திருக்கின்றேன்.

ஒருவரை கட்சி ஆரம்பிக்கக் கூடாது அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. இனிமேலும் அவர் தாமதிப்பதை நிச்சயமாக அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பது தெளிவாக புரிகிறது. நான் ஏற்கனவே (2015) அவருக்கு சொன்ன முக்கிய ஆலோசனையின் படி அவர் துரிதமாக செயல்பட்டால் அரசியலில் அவர் பிரகாசிக்க முடியும். வேறு வழியை தேர்ந்தெடுத்தால் அது அவருக்கு எதிர்பார்த்த பலனை கொடுக்காது என்பதே என் கருத்து.
   
31.12.2017  அன்று அவர் என்ன சொல்வார் என்பதை இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம். அவர் அரசியலுக்கு வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.
என்னால் பலன் அடைந்த கட்சிகள் பல உள்ளன. நன்றி!

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்'
68 காலியார் தெரு,
அதிராம்பட்டினம் - 614 701.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
30-12-2017

1 comment:

  1. \\அவரது அரசியலுக்கு அவருடைய வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.\\ இந்த வயசுக்கு மேலே இவரு அரசியலுக்கு வந்து ஜெயிச்சி , CM ஆகி 1 வருசத்துல உடல் நிலை காரணமாக சிங்கப்பூர் போய்டுவாரு ....அப்புறம் செட்டப் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ் தியானம் பண்ணி போட்டோ வெளியிடாமையே காலி பண்ணிட்டானுங்க விசாரணை கமிஷன் வேணும்னு தனுஷை தூக்கி உள்ளே வெச்சுருவானுங்க....கட்சி கைவிட்டு போகுதுன்னு நாட்டிய பேரொளி "ரஜினி அம்மா ஐஸ்வர்யா பேரவை " ன்னு ஒன்னு ஆரம்பிக்கும்..,ஹும். உள்ளாட்சி தேர்தலில் இவரது கட்சி போட்டியிடாதாம் ஆனால் சட்டமன்றத்தேர்தலில் குதிக்குமாம்., இப்போதுள்ள சூழ்நிலைக்கு போட்டியிடும் எல்லா கட்சியும் குக்கரில் வெந்திடும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.