.

Pages

Friday, December 29, 2017

அதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரையறை: ஜன. 2-க்குள் கருத்து தெரிவிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டப் பேரூராட்சிகளின் வார்டுகள் மறுவரையறை வரைவு குறித்த கருத்துருக்கள் மீது பொதுமக்கள் ஜன. 2-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு சட்டம் மற்றும் வார்டுகள் மறுவரையறை ஆணைய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளின்படி 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளில் தயார் செய்யப்பட்ட வார்டுகள் மறுவரையறை கருத்துருவுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு மறுவரையறை மீது கருத்துகள் தெரிவிக்க விரும்வோர் தொடர்புடைய பேரூராட்சியின் வார்டு மறுவரையறை அலுவலர் அல்லது செயல் அலுவலர் அல்லது மாவட்ட மறுவரையறை அலுவலர் அல்லது எனக்கு (மாவட்ட ஆட்சியர்) எழுத்து பூர்வமாக ஜன. 2-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம்.

1 comment:

  1. இது நல்ல வாய்ப்பு. ஆர்வலர்களும் பொதுநல விரும்பிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நம்மூரில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை - வார்டுகள் பிரிப்பு, பொருத்தமற்ற பெயர்களைத் தெருக்களுக்கு வைத்திருப்பது போன்றவற்றைப் பற்றிப் பேசலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.